ஆப்நகரம்

Bank Locker: தெரியுமா.. ஜனவரி 1 முதல்.. இதுதான் வங்கி லாக்கரின் புது ரூல்ஸ்!!

ஜனவரி 1,2023 ஆம் ஆண்டு முதல் வங்கி லாக்கருக்கான வாடகை உட்பட பல விதிகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Samayam Tamil 24 Dec 2022, 3:52 pm
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் அனைத்து முன்னணி வங்கிகளும் லாக்கரின் புது ஒப்பந்தத்தை ஜனவரி 1, 2023 க்கு முன் அதன் வைத்திருப்பவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் புதிய லாக்கர் விதிகள் ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Samayam Tamil Bank locker new rules


இதற்குமுன் ரிசர்வ் வங்கி 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி வங்கி லாக்கர்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை அறிவித்தது, இது ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வந்தது.

இப்போது, அனைத்து லாக்கர் உரிமையாளர்களும் புதிய லாக்கர் விதிகளை ஏற்று, ஜனவரி 1, 2023க்கு முன்னதாக புதுப்பித்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, “எந்தவொரு நியாயமற்ற விதிமுறைகள் அல்லது நிபந்தனைகள் அவற்றின் லாக்கர் ஒப்பந்தங்களில் இணைக்கப்படவில்லை என்பதை வங்கிகள் உறுதி செய்யும். மேலும், ஒப்பந்தத்தின் விதிமுறைகள் வங்கியின் நலன்களைப் பாதுகாப்பதற்காக வழக்கமான வணிகப் போக்கில் தேவைப்படுவதை விட அதிகக் கடுமையானதாக இருக்காது. ஜனவரி 1, 2023க்குள் வங்கிகள் ஏற்கனவே இருக்கும் லாக்கர் வாடிக்கையாளர்களுடன் தங்கள் லாக்கர் ஒப்பந்தங்களை புதுப்பிக்க வேண்டும்” என ரிசர்வ் வங்கி அறிவுறித்தியுள்ளது

வழிகாட்டுதல்களில், புதிய விதிகளின் கீழ் அனைத்து வங்கிகளும் தங்கள் பாதுகாப்பான வைப்பு லாக்கர் வைத்திருப்பவர்களுக்கு புதிய லாக்கர் ஒப்பந்தத்தை விநியோகிக்க வேண்டும் எனவும், அனைத்து கடன் வழங்குபவர்களும் IBA-வரைவு செய்யப்பட்ட மாதிரி லாக்கர் ஒப்பந்தத்தைப் பயன்படுத்தலாம், இது புதுப்பிக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சமீபத்திய வழிகாட்டுதல்களில், லாக்கர் அறைகளைக் கண்காணிக்க வங்கிகள் சிசிடிவி பொருத்துவது கட்டாயம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இது தவிர, சிசிடிவி தரவுகளை 180 நாட்களுக்கு வைத்திருக்க வேண்டும் என்றும் வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. இதன்மூலம் லாக்கர் குறித்த ஏதேனும் முரண்பாடுகள் உள்ளதா என்பதைச் சரிபார்க்க இது உதவும்.

பெட்டகங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள விலைமதிப்பற்ற பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டாலோ அல்லது தீ அல்லது கட்டிடம் இடிந்து விழுந்தாலோ வங்கிக் கட்டணத்தை விட 100 மடங்கு வரை வங்கி வாடிக்கையாளர்கள் பெறலாம் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

Bank லாக்கரின் வாடகை

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, வங்கிகள் லாக்கரை ஒதுக்கும் போது, மூன்று ஆண்டுகளுக்கு வாடகையாக எடுத்துக் கொள்ளப்படும் டெர்ம் டெபாசிட்டை இப்போது கோரலாம். எவ்வாறாயினும், தற்போதுள்ள லாக்கர் வைத்திருப்பவர்களுக்காக, வங்கிகள் அத்தகைய டெர்ம் டெபாசிட்களை அல்லது செயல்பாட்டு கணக்குகளை வைத்திருப்பவர்களிடம் பணம் செலுத்துமாறு வலியுறுத்த முடியாது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்