ஆப்நகரம்

இனி இந்த வங்கிகளில் பணம் போடவும், எடுக்கவும் முடியாது.. ரிசர்வ் வங்கி அறிவிப்பால் சிக்கல்!

இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து செயல்படாமல் இருக்கும் ஆறு கூட்டுறவு வங்கிகளில் மீது மக்கள் பணம் முதலீடு செய்யவதை தடை வித்தித்துள்ளது.

Samayam Tamil 25 Feb 2023, 8:14 pm
சில வங்கிகள் கடந்த ஓராண்டு காலமாக தொடர்ந்து எவ்வித செயல்பாடுகளும் இல்லாமல் மக்களின் பணத்தைக் கொண்டு மட்டும் செயல்பட்டு வருவதால், மக்களின் பணத்தை காப்பாற்றும் விதமாக ரிசர்வ் வங்கி 6 கூட்டுறவு வங்கிகளுக்கு தடை விதித்துள்ளது.
Samayam Tamil RBI ban co- operative


அத்தடையானது வங்கி வாடிக்கையாளர்கள் தடை செய்யப்பட்ட வங்கிகளில் பணத்தை முதலீடு செய்வதையும், ரூ.5000 மேல் பணம் எடுப்பதையும் தடை விதித்துள்ளதால் அவ்வங்கியின் வாடிக்கையாளர்கள் தற்போது சிக்கலில் உள்ளனர்.

ரிசர்வ் வங்கி தடை செய்த 6 கூட்டுறவு வங்கிகளாக உத்திரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த HCBL Co-operative Bank, மஹாராஷ்ட்ராவின் Adarsh Mahila Nagari Sahakari Bank Maryadit வங்கி, Shimsha Sahakara Bank Niyamitha, Maddur எனும் கர்நாடாகவைச் சேர்ந்த வங்கிகளின் இயக்கத்திற்கு அடுத்த 6 மாதங்களுக்கு தடை விதித்துள்ளது.

இந்த வங்கிகள் மீதான கட்டுப்பாடுகளால் அதன் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு 5000 ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

வங்கிகளின் நிதிநிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் அதன் வாடிக்கையாளர்களின் நலன் பாதிக்கப்படும் என்ற சந்தேகத்தில் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

இந்த வங்கிகள் மீதான தடை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அடுத்த 6 மாதங்களுக்கு தடை நீடிக்கும். தேவைப்பட்டால் அந்த சமயத்தில் இந்தத் தடை மேலும் நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

அதுமட்டுமின்றி ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, புதிய வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் டெபாசிட் பெறுவதற்கும் இந்த வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வங்கிகள் புதிதாக கடன் வழங்குவதற்கும், முதலீடு செய்வதற்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. ஆனால் இந்த வங்கியின் உரிமத்தை கேன்சல் செய்யவில்லை என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி எடுக்கும் இதுபோன்ற அதிரடியான நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளால் அதில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்படும். தங்களது டெபாசிட் பணத்துக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் இருக்கும்.

பொதுவாக வங்கிகளில் பணம் போட்ட வாடிக்கையாளர்களுக்கு இதுபோல திடீரென்று பாதிப்பு ஏற்படும்போது இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும். எனவே வங்கியில் பணம் போட்டவர்கள் பயப்படத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


அடுத்த செய்தி

டிரெண்டிங்