ஆப்நகரம்

வங்கி கடன் வாங்கியவர்களுக்கு வட்டி ரத்து.. ரிசர்வ் வங்கி உத்தரவு!

வங்கி கடன் வாங்கியவர்களுக்கு அபராத வட்டியை ரத்து செய்துள்ளது ரிசர்வ் வங்கி.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 18 Apr 2023, 2:38 pm
வங்கி கடன் வாங்கியோரிடம் அபராத வட்டி வசூலிக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இது வங்கிகளில் கடன் வாங்கியோருக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது. ஏனெனில், பல்வேறு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இந்த அபராத வட்டி முறையை தவறாக பயன்படுத்தி வருகின்றன.
Samayam Tamil rbi releases draft rules on penal charges on bank loans all you need to know about the regulation
வங்கி கடன் வாங்கியவர்களுக்கு வட்டி ரத்து.. ரிசர்வ் வங்கி உத்தரவு!


​அபராத வட்டி​

வங்கி கடன் வாங்கியவர்கள் கடனை சரிவர செலுத்தவில்லை எனில் அவர்களுக்கு அபராத வட்டி விதிக்கப்பட்டு வருகிறது. கடன் வாங்கியோரிடம் கடனை செலுத்துவதில் ஒழுக்கம் இருக்க வேண்டும் என்பதற்காக அபராத வட்டி விதிக்கப்பட்டு வருகிறது.

​புகார்கள்​

ஆனால், பல்வேறு வங்கிகள் இந்த அபராத வட்டியை தவறாக பயன்படுத்துவதாக ரிசர்வ் வங்கியிடம் புகார்கள் குவிந்து வந்தன. உதாரணமாக, கடன் வாங்கியோர் சரியாக கடன் செலுத்த வேண்டும் என்பதற்கு மாறாக வங்கிகள் தங்கள் வருவாயை பெருக்குவதற்காக அபராத வட்டி விதித்து வருவதாக புகார்கள் எழுந்தன.

​ரிசர்வ் வங்கி முடிவு​

இதையடுத்து அபராத வட்டி முறையை ரத்து செய்துவிட்டு வெறும் அபராத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என வங்கிகளுக்கான வரைவு சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

​அபராத கட்டணம்​

இதன்படி, வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி கடனை சரிவர திருப்பி செலுத்தாதவர்களிடம் அபராத வட்டிக்கு பதிலாக அபராத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். இந்த அபராத கட்டணமும் வெளிப்படையான முறையில், நியாயமாக வசூலிக்கப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

​ரிசர்வ் வங்கி தடை​

இதுமட்டுமல்லாமல், அபராத கட்டணத்துக்கு வட்டி வசூலிக்கக்கூடாது. மேலும், கடனுக்கான அசல் தொகையுடன் சேர்த்து அபராத கட்டணம் வசூலிக்கக்கூடாது. அபராத கட்டணத்தை தனியாக மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்