ஆப்நகரம்

பழைய ஓய்வூதிய திட்டம் மிகப்பெரிய ஆபத்து.. மாநில அரசுகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது மாநிலங்களுக்கு ஆபத்து என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 17 Jan 2023, 6:33 pm
அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நெடுநாட்களாக போராடி வருகின்றனர். சில மாநிலங்கள் மட்டும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளன. இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதால் மாநிலங்களின் நிதிநிலை கடுமையாக பாதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
Samayam Tamil rbi report warns implementation of old pension scheme will hurt state governments finances in future
பழைய ஓய்வூதிய திட்டம் மிகப்பெரிய ஆபத்து.. மாநில அரசுகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!


​பழைய ஓய்வூதிய திட்டம்

2003ஆம் ஆண்டு வரை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. பிறகு, 2004ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு தேசிய பென்சன் திட்டம் (NPS) கொண்டுவரப்பட்டது.

​சலுகைகள் இல்லை

பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைத்த நிலையான ஓய்வூதியமும், பல்வேறு சலுகைகளும் தேசிய பென்சன் திட்டத்தில் கிடைப்பதில்லை என அரசு ஊழியர்கள் கூறுகின்றனர். எனவே, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

​அமல்படுத்தும் மாநிலங்கள்

ஏற்கெனவே ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளன. இந்த வரிசையில் தற்போது இமாசலப் பிரதேசமும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற குரல் வலுப்பெற்று வருகிறது.

​ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

இந்நிலையில், மாநிலங்களின் நிதிநிலை குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சில மாநிலங்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

​நிதிச் சுமை ஏற்படும்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதால் ஏற்படும் சேமிப்புகள் குறுகிய கால அடிப்படையிலானது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இப்போதைய செலவுகளை எதிர்காலத்துக்கு தள்ளிப்போடுவதால், வரும் ஆண்டுகளில் மாநிலங்களுக்கு பென்சன் சுமை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

​மத்திய அரசு என்ன சொல்கிறது?

மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அரசுக்கு திட்டம் இருக்கிறதா என அண்மையில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அரசு அளித்த பதிலில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு எந்த திட்டமும் இல்லை என தெரிவித்துவிட்டது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்