ஆப்நகரம்

வங்கியில் பணம் எடுக்க தடை... ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு!

இந்த வங்கியில் இனி வாடிக்கையாளர்கள் 10,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும்.

Samayam Tamil 7 Dec 2021, 3:03 pm
வங்கி விதிமுறைச் சட்டங்களை மீறும் வங்கிகள் மீதும், தொடர்ந்து இயங்க முடியாமல் தவிக்கும் வங்கிகள் மீதும் மத்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் பாய்வது வழக்கம். இந்த வங்கிகளை ரிசர்வ் வங்கி தனது முழுக் கட்டுப்பாட்டில் எடுத்து, அபராதம் விதிப்பது, வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிப்பது போன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
Samayam Tamil bank


அந்த வகையில், நெருக்கடியான சூழலில் இயங்கி வந்த நாகர் அர்பன் கூட்டுறவு வங்கிக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த வங்கி மகாராஷ்டிர மாநிலத்தை மையமாகக் கொண்டதாகும். இந்த வங்கியில் பணம் போட்ட வாடிக்கையாளர்கள் இனி 10,000 ரூபாய் வரையில் மட்டுமே பணம் எடுக்க முடியும். அதைத் தாண்டி அவர்களால் பணம் எடுக்க முடியாது.

வங்கி விதிமுறைச் சட்டம் 1949-இன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 6ஆம் தேதி முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்த வங்கி மீதான தடை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், இந்த வங்கியில் இனி பணம் போடவும், கடன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம்மில் பணம் எடுக்க போறீங்களா? இனி ரொம்ப கஷ்டம்... அதிக கட்டணம்!
ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் இல்லாமல் இந்த வங்கி இனி யாருக்கும் கடன் கொடுக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும், முதலீடு செய்யவும் முடியாது. ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் இந்த வங்கி இனி எதுவும் செய்ய முடியாது. ரிசர்வ் வங்கியின் இந்தத் தடை உத்தரவால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வங்கியில் பணம் போட்டவர்களுக்கு டெபாசிட் இன்சூரன்ஸ் பணம் வழங்கப்படும். ஆனால் வாடிக்கையாளர்களுக்கு அதுபற்றிய விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை. இதுபோன்ற வங்கிகளில் பணம் போட்டவர்கள் பயப்படத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. ஆனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சம் இருக்கத்தான் செய்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்