ஆப்நகரம்

அடாவடி ஆன்லைன் கடன் ஆப்கள்.. இந்தியாவில் இவ்வளவு இருக்கு.. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!

இந்தியாவில் சுமார் 600 ஆன்லைன் கடன் ஆப்கள் செயல்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Samayam Tamil 14 Dec 2021, 3:57 pm
இந்தியாவில் ஆன்லைன் கடன் ஆப்களின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் ஏராளமான ஆப்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன. சட்டவிரோத கடன் ஆப்களால் பாதிக்கப்படுவோர், ஏமாந்தவர்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள் கூட உண்டு.
Samayam Tamil File image


இந்நிலையில், இந்தியாவில் சுமார் 600 சட்டவிரோத கடன் ஆப்கள் செயல்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆப்கள் அனைத்தும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பல்வேறு ஸ்டோர்களில் கிடைப்பதாகவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை எச்சரிக்கிறது.

தற்போதைய சூழலில் இந்தியாவில் மொத்தமாக சுமார் 1,100 ஆன்லைன் கடன் ஆப்கள் செயல்பட்டு வருவதாகவும், இந்த ஆப்கள் அனைத்தும் 80க்கும் மேற்பட்ட ஸ்டோர்களில் கிடைப்பதாகவும் ரிசர்வ் வங்கி கூறுகிறது. இந்த ஆப்களை Loan, instant loan, quick loan போன்ற வார்த்தைகளை கொண்டு தேட முடிகிறது எனவும் ரிசர்வ் வங்கி கூறுகிறது.

Bank Strike: போராட்டம் வேண்டாம் பிளீஸ்... வங்கிகள் கோரிக்கை!
ஆன்லைன் கடன் ஆப்கள் குறித்து புகார்கள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், புகார்களை பெறவும், நடவடிக்கை எடுக்கவும் தனி இணையதளத்தையே ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது. 2020 ஜனவரி முதல் 2021 மார்ச் மாதம் வரை ஆன்லைன் கடன் ஆப்கள் குறித்து 2562 புகார்கள் பதிவாகியுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 572 புகார்கள் பதிவாகியுள்ளது. அடுத்தபடியாக கர்நாடகத்தில் 394 புகார்களும், டெல்லியில் 352 புகார்களும் பதிவாகியுள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்