ஆப்நகரம்

பால் டூ பெட்ரோல்.. இதெல்லாம் ரேட் அதிகமா இருக்கும்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

பால், கோழிக்கறி, பெட்ரோல், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வாக இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Samayam Tamil 4 May 2022, 4:23 pm

அண்மைக்காலமாக பணவீக்கம் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. உணவு பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து பொதுமக்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil milk - petrol


பணவீக்கத்தை சமாளிப்பதற்காக உலகம் முழுவதும் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் வட்டி விகிதம் உயர்த்தப்படாமல் தொடர்ந்து நீடித்து வந்தது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் அவசரமாக கூடியது.

இந்தக் கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 0.40% உயர்த்தப்பட்டு 4.40% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் வெளியிட்டார்.

வட்டி விகிதம் உயர்வு.. ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு.. நமக்கு என்ன பாதிப்பு?

மேலும், பணவீக்கத்தின் அழுத்தம் தொடர்ந்து நீடிக்கும் எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட சில முக்கிய தகவல்களும் குறிப்பிடத்தக்கவை.

* ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் உயரும்.

* சர்வதேச அளவில் உணவு விலை உயர்வு இந்தியாவுக்குள்ளும் ஊடுருவியுள்ளது

* உணவு விலை தொடர்ந்து உயர்வாகவே இருக்கும் என குறியீடுகள் காட்டுகின்றன

* சமையல் எண்ணெய் விலை மேலும் உயரலாம்

* தீவனங்களுக்கான செலவு அதிகரித்துள்ளதால் கோழிக்கறி, பால் பொருட்களின் விலை உயர்வாக இருக்கும்

* சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு மேல் நீடிக்கிறது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வாக இருக்கும்.

* பணவீக்க அழுத்தம், சர்வதேச அளவில் விலை உயர்வு போன்ற காரணங்களால் பணவீக்கம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அடுத்த செய்தி

டிரெண்டிங்