ஆப்நகரம்

ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ. 59 கோடி அபராதம்!

விதிமுறைகளை மீறி ஆவணங்களை மறைத்ததால், ஐசிஐசிஐ வங்கிக்கு 58.9 கோடி ரூபாய் அபராதம் விதித்து ஆர்.பி.ஐ உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 29 Mar 2018, 6:40 pm
விதிமுறைகளை மீறி ஆவணங்களை மறைத்ததால், ஐசிஐசிஐ வங்கிக்கு 58.9 கோடி ரூபாய் அபராதம் விதித்து ஆர்.பி.ஐ உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil icici


இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கியும் தங்களுக்கு முதலீடு திரட்டுவதற்காக, பல்வேறு திட்டங்களின் கீழ் பத்திரங்களை வெளியிட்டு வருகிறது.

இதை ஹெச்.டி.எம் எனப்படும் முதிர்வடையும் வரை வைத்திருத்தல் என்ற முறையிலும் பத்திரங்கள் வெளியிடப்படும். இதற்கு இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு விதிமுறைகளை வகுத்து கொடுத்துள்ளது.

இந்நிலையில், ஐசிஐசிஐ வங்கி, நேரடி கடன் பத்திரம் விற்பனையில் விதிமுறைகளை மீறி ஆவனங்களை மறைத்ததாக குற்றம் சாட்டியுள்ள ரிசர்வ் வங்கி, இதற்கு அபராதமாக 58.9 கோடி ரூபாய் விதித்துள்ளது.

இந்த உத்தரவு வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949 ன்படி பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது ரிசவர் வங்கி விதித்துள்ள மிக அதிகபட்ச அபராதம் என்பதும் குறிப்படத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்