ஆப்நகரம்

எகிறும் வட்டி.. இதுக்கு மேல தாங்க முடியாது.. ரியல் எஸ்டேட் துறைக்கு ஆபத்து!

இதற்கு மேலும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் ரியல் எஸ்டேட் துறை பாதிக்கப்படும் என ரியல் எஸ்டேட் துறையினர் கூறுகின்றனர்.

Samayam Tamil 3 Oct 2022, 12:32 pm
வட்டி விகிதங்கள் மேலும் உயர்த்தப்பட்டால் ரியல் எஸ்டேட் துறை கடுமையாக பாதிக்கப்படும் என தொழில்துறை தரப்பில் கூறப்படுகிறது.
Samayam Tamil real estate


கடந்த சில மாதங்களாக பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை நான்கு முறை உயர்த்திவிட்டது. முதலில் மே மாதம் ரெப்போ வட்டி விகிதம் 4.40% ஆக உயர்த்தப்பட்டது.

பின்னர் ஜூன் மாதம் ரெப்போ வட்டி 4.90% ஆக உயர்த்தப்பட்டது. இதன்பின் ஆகஸ்ட் மாதம் ரெப்போ வட்டி 5.40% ஆக உயர்த்தப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 30ஆம் தேதி ரெப்போ வட்டி 5.90% ஆக உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்றவற்றுக்கான வட்டி விகிதங்களும் உயரும். இதனால், கடன் வாங்கியவர்கள் செலுத்தும் மாத EMI தொகை உயரும்.

SBI வாடிக்கையாளர்களுக்கு மெகா ஷாக்.. இனி அதிக EMI கட்டணும்!
இந்நிலையில், ஏற்கெனவே எதிர்பார்த்ததை விட கடுமையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இனியும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் ரியல் எஸ்டேட் துறை கடுமையாக பாதிக்கப்படும் எனவும் இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய் (CREDAI) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கிரெடாய் மேற்கு வங்க தலைவர் சுஷில் மோத்தா, “டிசம்பர் மாதத்துக்குள் 2% வட்டி விகிதம் உயர்த்தப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் ஏற்கெனவே 1.9% வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததை விட மூன்று மாதங்களுக்கு முன்பே இவ்வளவு வட்டி உயர்த்தப்பட்டுவிட்டது.

இதற்கு மேலும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால், பொருளாதாரத்துக்கு பெரிதும் பங்களிக்கும் ரியல் எஸ்டேட் துறையின் முன்னேற்றம் தடைபடும்” என்று தெரிவித்துள்ளார். ஏற்கெனவே எஸ்பிஐ, எச்டிஎஃப்சி உள்ளிட்ட வங்கிகள் கடன்களுக்கான வட்டியை உயர்த்திவிட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்