ஆப்நகரம்

பிஎம் கிசான்: ரூ.2,000 வரலயா? இந்தத் தவறை உடனே திருத்துங்க!

பிஎம் கிசான் திட்டத்தின் 9ஆவது தவணைப் பணம் இன்னும் வராமல் இருந்தால் நீங்கள் இந்தத் தவறுகளைத் திருத்தியே ஆகவேண்டும்.

Samayam Tamil 18 Aug 2021, 7:24 pm
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டப் பயனாளிகளுக்கு 9ஆவது தவணைப் பணத்தை மத்திய அரசு ஆகஸ்ட் 9ஆம் தேதி விடுவித்தது. காணொளிக் காட்சி வாயிலாக 9.75 கோடி விவசாயிகளுக்கு இந்த நிதியைப் பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். 9ஆவது தவணையில் ஒரே நாளில் விவசாயிகளுக்கு ரூ.19,500 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சில விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் 9ஆவது தவணைப் பணம் வரவில்லை என்ற புகார் உள்ளது.
Samayam Tamil pm kisan


பலருக்கு ஏன் இன்னும் பணம் வரவில்லை என்ற சந்தேகம் இருக்கும். அதற்கு சில காரணங்கள் உள்ளன. பயனாளியின் பெயர், வங்கிக் கணக்கு விவரங்கள் போன்றவை தவறாக இருந்தாலும் பணம் வந்துசேராது. மிக முக்கியமாக பயனாளியின் ஆதார் எண் சரியாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதில் ஏதேனும் பிழை இருந்தால் தவணைப் பணம் சரியாக வந்துசேராது. எனவே பணம் வராத விவசாயிகள் தங்களது விவரங்களை உடனடியாக சரிபார்க்க வேண்டும். அதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் திருத்திவிடலாம்.

கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. இப்போ என்ன ரேட் தெரியுமா?
பிஎம் கிசான் திட்டத்தின் www.pmkisan.gov.in என்ற வெப்சைட்டில் சென்று farmer’s corner என்ற வசதியில் beneficiary list என்ற ஆப்சனில் செல்ல வேண்டும். அதில் மாவட்டம், கிரமம் உள்ளிட்ட விவரங்களைத் தேர்ந்தெடுத்து get report கொடுத்தால் பயனாளியின் முழு விவரமும் தெரியும். அதில் பிழைகள் இருந்தால் அவற்றை மாற்றுவதற்கு மீண்டும் வெப்சைட்டில் உள்நுழைந்து beneficiary status button கிளிக் செய்து ஆதார், மொபைல் நம்பர் போன்ற விவரங்களை வழங்கினால் 9ஆவது தவணைப் பணத்தின் தற்போதைய நிலை தெரிவிக்கப்படும். இந்த வெப்சைட்டிலேயே உங்களது விவரங்களை அப்டேட் செய்துகொள்ளலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்