ஆப்நகரம்

இ.எஸ்.ஐ திட்ட சந்தா விகிதம் அதிரடியாக குறைப்பு; சலுகையை வாரி வழங்கிய மத்திய அரசு!

இ.எஸ்.ஐ திட்டத்துக்கு தொழிலாளர் மற்றும் தொழிலதிபர் செலுத்தும் சந்தா விகிதத்தை மத்திய அரசு குறைத்து உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 13 Jun 2019, 9:02 pm
தொழிலாளர் மாநில காப்பீட்டு சட்டம் 1948ன் கீழ், மருத்துவம், நிதி, கர்ப்ப கால, மாற்றுத் திறனாளிகள், சார்ந்த வாழும் நபர்களுக்கு என பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன. இது ESIC-ன் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil Indian_Parliament_Building_Delhi_India_3-1


இதற்கான நிதியில் தொழிலாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகிய இரு தரப்பினரும் பங்களிப்பை செலுத்துகின்றனர். ESI எனப்படும் தொழிலாளர் மாநில காப்பீட்டு சட்டத்தின் சந்தா விகிதத்தை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் முடிவு செய்கிறது.

தற்போதைய நிலையில் தொழிலாளர்கள் 4.75% மற்றும் தொழில் நிறுவனங்கள் 1.75% என மொத்தம் 6.5% இ.எஸ்.ஐக்கு பங்களிப்பை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, வரலாற்று சிறப்புமிக்க முடிவை தற்போது எடுத்துள்ளது.

அதாவது, இ.எஸ்.ஐ சந்தா விகிதத்தை 6.5%ல் இருந்து 4%ஆக குறைத்துள்ளது. அதன்படி, இனி தொழிலாளர்கள் செலுத்தும் சந்தா 4.75%ல் இருந்து 3.25%ஆகவும், தொழில் நிறுவனங்கள் செலுத்தும் சந்தா 1.75%ல் இருந்து 0.75%ஆகவும் குறைக்கப்படுகிறது.

இந்த குறைக்கப்பட்ட சந்தா விகிதம் வரும் ஜூலை 1ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. இது 3.6 கோடி தொழிலாளர்கள் மற்றும் 12.85 லட்சம் தொழில் நிறுவனங்களும் பயன்பெறுகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்