ஆப்நகரம்

வரி செலுத்திய 25 லட்சம் பேருக்கு ரீஃபண்ட்!

ஏப்ரல் 1 முதல் 25 லட்சம் பேருக்கு வருமான வரி ரீஃபண்ட் தொகை வழங்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 27 Aug 2020, 2:45 pm
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இக்காலத்தில் நாட்டு மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு சலுகை அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டதோடு, வங்கிக் கடன் செலுத்துவது, வரி செலுத்துவது போன்றவற்றுக்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது. அதோடு, வரி செலுத்தியோருக்குத் திரும்பி வரவேண்டிய ரீஃபண்ட் தொகையையும் அரசு வேகமாக வழங்கி வருகிறது.
Samayam Tamil refund


அதன்படி, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரையில் மொத்தம் 25.5. லட்சம் பேருக்கு ரீஃபண்ட் தொகையாக ரூ.95,853 கோடியை வழங்கியுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இதில் தனிநபர் வருமான வரியாக மொத்தம் 23.9 லட்சம் பேருக்கு ரூ.29,361 கோடி ரீஃபண்ட் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, கார்பரேட் வரியின் கீழ் 1.63 லட்சம் பேருக்கு ரூ.66,493 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கருத்தில்கொண்டே ரீஃபண்ட் தொகையை விரைந்து வழங்குவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,000 பேருக்கு வேலை: பேடிஎம் அறிவிப்பு!

முன்னதாக, ஆகஸ்ட் 20 வரையில் 24.64 லட்சம் பேருக்கு ரூ.88,652 கோடி ரீஃபண்ட் தொகையை மத்திய நேரடி வரிகள் வாரியம் வழங்கியிருந்தது. வருமான வரிக்கான ரீஃபண்ட் தொகையாக 23,05,726 வழக்குகளின் கீழ் ரூ.28,180 கோடியும், கார்பரேட் வரிக்கான ரீஃபண்ட் தொகையாக 1,58,280 வழக்குகளின் கீழ் ரூ.60,472 கோடியும் வழங்கப்பட்டது. ரீஃபண்ட் தொகையை விரைந்து வழங்குவது மட்டுமல்லாமல், நேர்மையாக வரி செலுத்துவோரைக் கௌரவிக்கும் புதிய திட்டத்தையும் மத்திய அரசு சமீபத்தில் தொடங்கியது. இத்திட்டத்தை ஆகஸ்ட் 13ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ’வெளிப்படையான வரி விதிப்பு – நேர்மையாளரை மதித்தல்’ (Transparent Taxation — Honouring the Honest) என்ற இந்தத் திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்