ஆப்நகரம்

விவசாயிகளுக்கு ரூ.4,000 உதவி... உடனே இதைப் பண்ணுங்க!

பிஎம் கிசான் திட்டத்தில் ஜூன் 30ஆம் தேதிக்குள் பதிவுசெய்தால் விவசாயிகளுக்கு ரூ.4,000 கிடைக்கும்.

Samayam Tamil 10 Jun 2021, 1:13 pm
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் இதுவரையில் எட்டு தவணைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. எட்டாவது தவணைப் பணம் இன்னும் சில விவசாயிகளுக்கு சென்று சேரவில்லை என்று கூறப்படுகிறது. இதுவரை இத்திட்டத்தில் பதிவுசெய்யாத விவசாயிகளுக்கு மத்திய அரசு ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. ஜூன் 30ஆம் தேதிக்குள் பதிவுசெய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil pm kisan


பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரையில் ஒரு தவணை நிதியுதவி கூடப் பெறாத விவசாயிகள் தற்போது பதிவுசெய்தால் எட்டாவது மற்றும் ஒன்பதாவது தவணைப் பணம் சேர்ந்து வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி மொத்தம் ரூ.4,000 கிடைக்கும். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு ஆதார் அவசியம். எனவே ஆதார் இல்லாமல் இத்திட்டத்தில் விவசாயிகள் நிதியுதவி பெறமுடியாது. விவசாயிகள் தங்களது பெயரை இணைத்திருந்தாலும் ஆதாரை முறையாக இணைக்காவிட்டால் நிதியுதவி வங்கிக் கணக்குக்கு வராமல் முடங்கிவிடும்.

PMVVY vs SCSS: மூத்த குடிமக்களுக்கு சிறந்த திட்டம் எது?
பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிஎம் கிசான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதேநேரம், நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்றோர் இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்