ஆப்நகரம்

வெளிநாட்டு சொத்துகளை வளைத்துப்போடும் அம்பானி.. இப்போ சிங்கப்பூரில் என்ன வாங்கிருக்கார் தெரியுமா?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி சிங்கப்பூரில் குடும்ப அலுவலகத்தை அமைக்க முடிவு.

Samayam Tamil 7 Oct 2022, 11:47 am
ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி சிங்கப்பூரில் தனது குடும்பத்துக்கு ஒரு அலுவலகத்தை அமைக்க முடிவு செய்துள்ளதாக ரகசிய தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil Mukesh Ambani


சிங்கப்பூரில் தனது குடும்ப அலுவலகத்துக்கான இடத்தையும் முகேஷ் அம்பானி தேர்வு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், அலுவலகத்துக்கு ஊழியர்களை தேர்வு செய்வதற்கு ஒரு மேனேஜரையும் தேர்ந்தெடுத்துள்ளாராம் முகேஷ் அம்பானி.

இவ்வளவு வேலையையும் ரகசியமாக செய்து முடித்திருக்கிறார் அம்பானி. எனினும், இதுகுறித்து அம்பானி குடும்பம் தரப்பில் இருந்தோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தரப்பில் இருந்தோ அதிகாரப்பூர்வ தகவலோ, விளக்கமோ வெளியிடப்படவில்லை.

Indian Rupee: இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி.. இப்போ எவ்வளவு தெரியுமா?
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், ஏற்கெனவே பல்வேறு பெரும் பணக்காரர்கள் சிங்கப்பூரில் குடும்ப அலுவலகங்களை அமைத்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது முகேஷ் அம்பானியும் சிங்கப்பூரை தேர்வு செய்து அலுவலகம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க முதலீட்டாளர் ரே டலியோ ஏற்கெனவே சிங்கப்பூரில் அலுவலகம் அமைத்துள்ளார். இதுமட்டுமல்லாமல், கூகுள் இணை நிறுவனரான செர்கே பிரின் சிங்கப்பூரில் தனது குடும்ப அலுவலகத்தை அமைத்துளார்.

தென்கிழக்கு ஆசியாவில் மட்டுமல்லாமல் ஆசியாவிலும் சிங்கப்பூர் முக்கிய நிதி மற்றும் வர்த்தக நகரமாக திகழ்கிறது. இதனால் உலகளவில் பல பணக்காரர்கள் சிங்கப்பூரை தேர்வு செய்து வீடு வாங்குவது, அலுவலகம் அமைப்பது என செலவு செய்து வருகின்றனர்.

இதற்கு முன்பாகவே அம்பானி வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2021 ஏப்ரல் மாதம் இங்கிலாந்தில் புகழ்பெற்ற ஸ்டோக் பார்க்கை அம்பானி வாங்கியுள்ளார். மேலும், துபாயில் உள்ள சொகுசு வீட்டையும் அம்பானி வாங்கியுள்ளார். நியூ யார்க்கில் உள்ள மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலில் 73.4% பங்குகளை ரிலையன்ஸ் வாங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்