ஆப்நகரம்

சொந்த ஊருக்கு அனுப்பும் பணம்: ஆளும் இல்லை பணமும் இல்லை!

கொரோனா பாதிப்பால் இடம்பெயர்ந்து வேலைபார்க்கும் பணியாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணத்தில் 80 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 4 Apr 2020, 7:02 pm
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைபார்க்கச் செல்பவர்கள் அங்கிருந்து சொந்த நாட்டுக்குப் பணம் அனுப்புகின்றனர். அதேபோல, உள்நாட்டிலும் தங்களது சொந்த ஊர்களிலிருந்து வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்து வேலை தேடிச் செல்பவர்கள் அங்கிருந்து பணம் அனுப்புகின்றனர். கிராமப்புறங்களில் இருக்கும் பெரும்பாலானோர் வேலை பார்ப்பதற்காக தங்களது மாநிலங்களிலேயே உள்ள பெரிய நகரங்களுக்கும், மற்ற மாநிலங்களுக்கும் இடம்பெயர்ந்து சென்று அங்கிருந்து பணம் அனுப்புகின்றனர்.
Samayam Tamil சொந்த ஊருக்கு அனுப்பும் பணம்_ ஆளும் இல்லை பணமும் இல்லை


தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் இடம்பெயர்ந்து சென்று வேலைபார்ப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு வெளியானவுடனேயே மற்ற நகரங்களில் வேலை நிமித்தமாகத் தங்கியிருந்த அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்டனர். இதனால் சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக வந்த கொரோனா!

பொதுவாக, இடம்பெயர்ந்து வந்து வேலைபார்க்கும் ஊழியர்கள் ஆன்லைன் பணம் அனுப்பும் மையங்கள் வாயிலாகவே பணம் அனுப்புகின்றனர். ஃபினோ பேமெண்ட்ஸ் பேங்க், ஈக்கோ இந்தியா ஃபினான்சியல் சர்வீசஸ், ஸ்பைஸ் டிஜிட்டல், ஆக்சிஜன் சர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பணம் அனுப்பும் சேவையை வழங்கி வருகின்றன. கொரோனா பீதியால் இந்நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் இந்த ஆன்லைன் தளங்களில் பணம் அனுப்பப்படுகிறது.

விவசாயிகளைத் தின்னும் கொரோனா வைரஸ்!!

ஃபினோ பேமெண்ட்ஸ் பேங்க் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான ரிஷி குப்தா இதுகுறித்துப் பேசுகையில், “வழக்கமாக ஒரு மாதத்தில் ரூ.5,000 கோடிக்கு மேல் எங்களது தளத்தின் வாயிலாகப் பணம் அனுப்பப்படும். ஆனால் இப்போது அதில் 20 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்கு இதே மாதிரி மந்தநிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளதாலும் வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளதாலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது” என்றார்.

மற்ற ஆன்லைன் பணம் அனுப்பும் தளங்களிலும் ஊரடங்கு தடை காலத்தில் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்