ஆப்நகரம்

15,000 பேருக்கு வேலை போச்சு... ரினால்ட் அதிரடி!

உலக அளவில் 15,000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவதாக ரினால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 1 Jun 2020, 2:16 pm
ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மிகப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ரினால்ட், உலகின் பல்வேறு நாடுகளில் ஆலை அமைத்து கார்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவிலும் சென்னையை அடுத்த ஒரகடம் நகரத்தில் நிசான் நிறுவனத்துடன் இணைந்து ஆலை அமைத்து கார்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது கொரோனா பாதிப்பால் கடும் வருவாய் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த மூன்று மாதங்களாகவே கொரோனா பாதிப்புகள் மிக மோசமாக இருக்கும் சூழலில் வாகன விற்பனையும் ஏற்றுமதியும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
Samayam Tamil renault lay off


தற்போது வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்துள்ளதால் தனது நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 15,000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவதாக ரினால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலமாக அடுத்த 3 ஆண்டுகளில் 2 பில்லியன் யூரோக்களை மிச்சப்படுத்த முடியும் எனவும் ரினால்ட் நிறுவனம் கூறியுள்ளது. ஃபிரான்ஸ் நாட்டில் மட்டும் சுமாராக 4,600 பேரை வீட்டுக்கு அனுப்பவுள்ளதாகவும், எஞ்சிய 10,000 பேர் உலகம் முழுக்க இருக்கும் மற்ற கிளைகளில் இருந்து பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை: கடைக்கு போலாமா, வேணாமா?

உலகம் முழுவதும் ரினால்ட் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 1.80 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இதில் 10 சதவீதத்துக்கும் குறைவான ஊழியர்களை மட்டுமே தற்போது பணிநீக்கம் செய்வதாக ரினால்ட் நிறுவனம் கூறியுள்ளது. ரினால்ட் நிறுவனத்தின் வாகன உற்பத்தியைப் பொறுத்தவரையில், 2019ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 40 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இந்த அளவு 2024ஆம் ஆண்டில் 33 லட்சமாகக் குறைக்கப்படுவதாகவும் ரினால்ட் நிறுவனம் கூறியுள்ளது.

சமையல் சிலிண்டர் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா?

ஆட்டோமொபைல் துறையில் பணிநீக்கங்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ரினால்ட் நிறுவனமும் வேறு வழியில்லாமல் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் ஓலா, இந்தியா புல்ஸ், ஓயோ, காக்னிசண்ட், டாடா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில் மாபெரும் வேலையில்லாத் திண்டாட்ட நிலையை இந்தியா எதிர்நோக்கியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்