ஆப்நகரம்

மே மாத சம்பளம் கொடுக்க வேண்டும்.. முதல்வரிடம் பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை!

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 10 May 2023, 10:57 am
திமுக 181வது தேர்தல் வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்ற வேண்டும். இரண்டு ஆண்டு ஆட்சி முடிந்துவிட்டது. எனவே, இனியும் காலம் தாழ்த்துவது அவர்களின் குடும்பங்களை மிகவும் பாதிக்கும்.
Samayam Tamil part time teachers



2012ஆம் ஆண்டு அரசு பள்ளிகளில் 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் 16 ஆயிரம் பேருக்கு பகுதி நேர ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. அவர்களில் 4 ஆயிரம் காலியிடம் ஆகிவிட்டது. இதனால் 12 ஆயிரம் பேர் மட்டுமே பணி செய்கின்றனர். அவர்களுக்கு தற்போது 10 ஆயிரம் ரூபாய் சம்பளம்தான் வழங்கப்படுகிறது.

மே மாதம் சம்பளமானது 2012ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை உள்ள 11 மே மாதங்களுக்கும் சம்பளம் வழங்காமல் இருந்தது மனிதநேயம் இல்லை. 11 ஆண்டுக்கும் மே மாதம் சம்பளமாக பகுதி நேர ஆசிரியர் 81 ஆயிரம் ரூபாய் இழந்து உள்ளனர்.

2023ஆம் ஆண்டு இந்த மே மாத சம்பளம் மனிதாபிமானத்துடன் பகுதி நேர ஆசிரியர்களுக்கு முதல்வர் வழங்க வேண்டும். இதுபோல் கடந்த 2 ஆண்டாக பகுதி நேர ஆசிரியர்களுக்கு மட்டும்தான் தமிழ்நாட்டில் சம்பளம் உயர்த்தாமல் உள்ளனர்.

விலை வாசி உயரும்போது, இவர்களின் சம்பளத்தையும் நியாயமாக உயர்த்தி இருக்க வேண்டும். ஆனால் அதையும் செய்யவே இல்லை. பொங்கல் போனஸ் ஒருமுறைகூட வழங்கவில்லை என்பதும் மிகப்பெரிய அநீதி.

தொடர்ந்து எல்லா வகையிலும் புறக்கணிக்கப்படும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும். 13வது கல்வி ஆண்டு தொடங்க உள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதி 181ஐ நிறைவேற்றி, பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என்று கோர்க்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரான எஸ்.செந்தில் குமார் பேசுகையில், “திமுக 181வது தேர்தல் வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்றி பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வார் என 3 பட்ஜெட்டிலும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் குடும்பங்களும் நம்பினோம்.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தும் மே மாதம் சம்பளம் கடந்த இரண்டு ஆண்டாக வழங்கவில்லை. மேலும், இரண்டு ஆண்டாக சம்பளத்தைக்கூட உயர்த்தவில்லை. ரூ. 10 ஆயிரம் சம்பளத்தில் தவிக்கின்றோம். 11 ஆண்டை இழந்து விட்டோம். இந்த மே மாதம் சம்பளமாவது வழங்குங்கள். பணி நிரந்தரம் செய்து மீதி இருக்கும் காலத்திற்கு ஒரு விடியல் கொடுங்கள்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்