ஆப்நகரம்

வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.. லட்சங்களில் அபராதம்!

நான்கு கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ரூ.4 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

Samayam Tamil 12 Apr 2022, 8:52 am
வங்கி விதிமுறைச் சட்டங்களை மீறும் வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்வதும் அபராதம் விதிப்பதும் வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் தற்போது நான்கு கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் பிடியில் வசமாக சிக்கியுள்ளன. ஒழுங்குமுறை விதிகளுக்கு இணங்க தவறிய குற்றத்துக்காக மொத்தம் ரூ.4 லட்சம் அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.
Samayam Tamil bank


வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் செய்து கொள்ளும் பரிவர்த்தனைகள் அல்லது ஒப்பந்தங்களின் செல்லுபடியாகும் தன்மை அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஆண்டர்சல் நகர கூட்டுறவு வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

அதேபோல, மகாராஷ்டிர மாநிலம் அகமதுபூரில் உள்ள மகேஷ் அர்பன் கூட்டுறவு வங்கிக்கு ரூ.1 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள மற்றொரு வங்கியான நாந்தேட் வணிக கூட்டுறவு வங்கிக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, மத்தியப் பிரதேச மாநிலம் ஷாதோலில் உள்ள மரிடியம் மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வங்கிகள் மீதான இந்த நடவடிக்கையால் அந்த வங்கிகளில் பணம் போட்ட வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை தங்களது டெபாசிட் பணம் கிடைக்காமல் போய்விடுமோ என்று அஞ்சுகின்றனர். ஆனால், வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு வங்கிகள் தரப்பிலிருந்து காப்பீடு வழங்கப்படுவதால் அவர்கள் பயப்படத் தேவையில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்