மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்த தாஸ் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டம் ஆகும்.
இந்தக் கூட்டத்தில் குறுகிய கால கடன்களுக்காக வங்கிகள் கடைபிடிக்கும் ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வங்கிகள் கடைபிடிக்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.50%ஆக உள்ளது.
இது தற்போது 6.25%ஆக குறைக்கப்படுகிறது. கடைசியாக கடந்த ஆகஸ்ட் 2017ல் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கி அறிவிப்பால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.
அதே நேரம் பொதுமக்கள் வங்கிகளில் செய்துள்ள பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த அறிவிப்பை வங்கிகள் உடனடியாக அமல்படுத்துமா என்று பொருளாதார வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் குறுகிய கால கடன்களுக்காக வங்கிகள் கடைபிடிக்கும் ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வங்கிகள் கடைபிடிக்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.50%ஆக உள்ளது.
இது தற்போது 6.25%ஆக குறைக்கப்படுகிறது. கடைசியாக கடந்த ஆகஸ்ட் 2017ல் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கி அறிவிப்பால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.
அதே நேரம் பொதுமக்கள் வங்கிகளில் செய்துள்ள பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த அறிவிப்பை வங்கிகள் உடனடியாக அமல்படுத்துமா என்று பொருளாதார வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.