ஆப்நகரம்

அரசு பத்திரங்களில் முதலீடு செய்வது எப்படி? ரொம்ப ஈசிதான்!

மொபைலிலேயே ஈசியாக அரசு பத்திரங்களில் முதலீடு செய்வது எப்படி?

Samayam Tamil 20 Jan 2022, 5:37 pm
அரசு பத்திரங்களில் சிறு முதலீட்டாளர்களும் முதலீடு செய்வதற்கான வசதியை அண்மையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அரசு பத்திரங்களை இந்திய அரசின் சார்பில் ரிசர்வ் வங்கி ஏலம் மூலம் விற்பனை செய்கிறது.
Samayam Tamil government bonds


முதலீட்டாளர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்று அரசு பத்திரங்களில் முதலீடு செய்யலாம். அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய விரும்பும் சிறு முதலீட்டாளர்களுக்காக தேசிய பங்குச் சந்தை goBID என்ற மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த goBID மூலம் எளிய சிறு முதலீட்டாளர்களும் அரசு பத்திரங்களில் முதலீடு செய்யலாம். goBID மூலம் அரசு பத்திரங்களில் முதலீடு செய்வது எப்படி?

செலவு குறைவு - வருமானம் அதிகம்.. தங்க சேமிப்புக் கணக்கு பற்றி தெரியுமா?
* முதலில் goBID ஆப்பை மொபைலில் டவுன்லோடு செய்துகொள்ளவும்.

* புதிய முதலீட்டாளராக இருந்தால் பதிவு செய்துகொள்ளவும்.

* ஆப்பில் விற்பனைக்கு உள்ள T-Bill/Bondஐ தேர்வு செய்துகொள்ளவும்.

* டீமேட் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைனில் கட்டணத்தை செலுத்தவும்.

* நேரடியாக டீமேட் அக்கவுண்ட்டுக்கே பத்திரங்கள் வந்துசேர்ந்துவிடும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்