ஆப்நகரம்

அவசரகாலக் கடன்... சிறு நிறுவனங்களுக்கு ரூ.1.65 லட்சம் கோடி!

மத்திய அரசின் அவசரகாலக் கடன் திட்டத்தின் கீழ் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.1.65 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Jul 2021, 7:58 pm
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும், கோடிக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் துறையாகவும் உள்ள சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் துறை கொரோனா ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அத்துறையை மீட்டெடுக்க அரசு தரப்பிலிருந்து அவசரகாலக் கடன் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சிறு குறு தொழில்முனைவோர்களாகப் பதிவு செய்துள்ளவர்கள், தனி நபர் முதலாளிகள், கூட்டு நிறுவனங்கள், பதிவு செய்த நிறுவனங்கள், அறக்கட்டளைகள், அளவான கடன் கொண்ட கூட்டு நிறுவனங்கள், முத்ரா திட்டத்தின் கீழ் இணைந்திருப்பவர்கள் போன்றோர் கடன் வாங்கலாம் என்ற வரையறை நிர்ணயிக்கப்பட்டது.
Samayam Tamil loan


இத்திட்டம் வந்த பிறகு சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு அதிகளவு கடன் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் நாராயண் ரானே மக்களவையில் வெளியிட்டுள்ள தகவலின்படி, இத்திட்டத்தின் கீழ் 2021 ஜூலை 2ஆம் தேதி வரை மொத்தம் ரூ.1.65 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 2020 மே மாதம் முதல் 2021 ஜூலை 26ஆம் தேதி வரை நிலுவையில் இருந்த ரூ.55,863.30 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வங்கி இனி இயங்காது.. வாடிக்கையாளர்கள் பயங்கர அதிர்ச்சி!
சிறு, குறு தொழில்முனைவோர்கள் அதிகபட்சமாக ஏற்கெனவே வாங்கியிருக்கும் கடன் நிலுவைத் தொகையில் 20 சதவீதம் வரை அல்லது 25 கோடி ரூபாய் வரை இத்திட்டத்தில் கடன் வாங்கலாம். 2020 பிப்ரவரி 29 காலத்தில் இருக்கும் கடன் நிலுவைத் தொகையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அது போகக் கூடுதலாக 5 கோடி ரூபாய் வரை கடன் வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்