ஆப்நகரம்

தமிழகம்: தொழில் தொடங்க ரூ.10 லட்சம் மானியம்!

தொழில் தொடங்குவதற்கு ரூ.10 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 20 Jan 2021, 4:50 pm
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பல்வேறு நிறுவனங்கள் பெறும் இழப்புகளைச் சந்தித்தன. இதன் விளைவாகப் பலர் வேலையை இழந்தனர். தற்போது கொரோனா நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில் பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. நிறுவனங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. ஆனால் வேலையை இழந்த பலர் மீண்டும் வேறு நிறுவனத்தில் வேலைக்குச் சேராமல், சுயதொழில் செய்ய முடிவெடுத்துள்ளனர். அவர்களை ஊக்குவிக்க அரசு தரப்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
Samayam Tamil subsidy


தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மானிய உதவியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, தொழில் தொடங்க ரூ.10 லட்சம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனவரி 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஸ்டார்ட் அப் தொடக்க மானியத் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதன் மூலம் 10 தொழில் முனைவுத் திட்டங்களுக்கு ரூ.10 லட்சம் வீதம் வழங்கப்படும். இதற்காக வரும் ஜனவரி 25ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மானிய உதவியைப் பெறுவதற்கு http://startuptn.in/forms/tanseed/ என்ற முகவரியில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசின் தமிழ்நாடு புதிய தொழில்கள் மற்றும் கண்டுபிடிப்பு திட்ட ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் புதிதாக தொடங்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கு (ஸ்டார்ட் அப்) மானிய நிதி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கூடுதல் விவரங்களை www.startuptn.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்