ஆப்நகரம்

ஏடிஎம் பணப் பரிவர்த்தனையில் தோல்வியா; புகார் கொடுங்க; ரூ.100 இழப்பீடு கிடைக்கும்!

ஏடிஎம் பணப் பரிவர்த்தனையில் ஏற்படும் தோல்வி தொடர்பான புகாருக்கு, ரூ.100 இழப்பீடு வழங்கப்படும்.

TNN 9 Dec 2017, 1:53 pm
சென்னை: ஏடிஎம் பணப் பரிவர்த்தனையில் ஏற்படும் தோல்வி தொடர்பான புகாருக்கு, ரூ.100 இழப்பீடு வழங்கப்படும்.
Samayam Tamil rs 100 can claim for failed atm transaction
ஏடிஎம் பணப் பரிவர்த்தனையில் தோல்வியா; புகார் கொடுங்க; ரூ.100 இழப்பீடு கிடைக்கும்!


பொதுமக்களின் அவசர தேவைக்கு பணம் எடுக்க ஏடிஎம் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. இதில் பணம் எடுக்கும் போது, சில சமயங்களில் தோல்வியில் முடிந்து விடுகிறது.

அப்போது, வங்கிக் கணக்கில் இருந்து பணப் பிடித்தம் செய்யப்பட்டு விடுகிறது. ஆனால் நமது கைக்கு எந்தவித பணமும் கிடைப்பதில்லை.

இதுபோன்ற சமயங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, ஆர்.பி.ஐ புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வி அடைந்தால், புகார் அளித்த 7 நாட்களில் தீர்வு காணப்பட வேண்டும்.

ஒருவேளை 7 நாட்களில் பணம் திரும்பி வங்கிக் கணக்கில் போடப்படவில்லை எனில், ரூ.100 இழப்பீடு வழங்கப்படும்.

இதுபோன்ற புகார்களை, பரிவர்த்தனை தோல்வி அடைந்த 30 நாட்களுக்குள் புகார் அளிக்க வேண்டியது அவசியம்.

கடந்த 2009ஆம் ஆண்டு வரை 12 நாட்களாக இருந்த தீர்வு காணப்படும் நாட்களின் எண்ணிக்கை, தற்போது 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

Rs.100 can claim for failed ATM transaction.

அடுத்த செய்தி

டிரெண்டிங்