ஆப்நகரம்

விவசாயிகளுக்கு கோடி கோடியாய் பணம்.. மத்திய அரசு தகவல்!

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.183 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 16 Apr 2022, 9:36 am
புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. ஆனால் இந்த நிவாரணம் விவசாயிகளுக்கு வந்து சேருவதில் தாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. அந்தப் பிரச்சினையை சரிசெய்து விவசாயிகளுக்கு விரைந்து இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil crop


2020-2021ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக 1.16 லட்சம் விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.183.13 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிவர், புரெவி புயல் காரணமாகவும், 2021 ஜனவரி மாதத்தில் எதிர்பாராது பெய்த கனமழையினால் தமிழகத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2020-21ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விரைவில் இழப்பீட்டுத் தொகை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்குத் தொகையாக மொத்தம் ரூ.1,940 கோடி வழங்கப்பட்டது. மேலும், ஒன்றிய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக, ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.1,118 கோடி பங்குத் தொகையில், இதுவரை, ரூ.660 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

பணம் வரும் தேதி மாற்றம்.. விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

இதன் காரணமாக 2020-21ஆம் ஆண்டு ராபி பருவத்தில் காப்பீடு செய்யப்பட்ட நவரை, கோடை நெல், உளுந்து, பச்சைப்பயறு, நெல் தரிசில் உளுந்து, நிலக்கடலை, எள், பருத்தி, மக்காச்சோளம், சோளம், சிவப்பு மிளகாய் போன்ற பயிர்களில் மகசூல் இழப்பால் பாதிப்படைந்து, தகுதி வாய்ந்த 1,15,947 விவசாயிகளுக்கு கடந்த 10 நாட்களில் மட்டும், ரூ.183.13 கோடி இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

நாடு முன்னேற விவசாயிகள் முன்னேறணும்: பிரதமர் மோடி பளிச்!
தமிழக அரசு எடுத்த தொடர் நடவடிக்கையினால் 2020-21ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளில், இதுவரை 10.89 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2,285 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் இழப்பீட்டுத்தொகையினை வழங்குவதற்கு தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்