ஆப்நகரம்

சுவிஸ் வங்கிகளில் மூட்டை மூட்டையாய் இந்தியர்களின் பணம்!

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள பணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 18 Jun 2021, 4:42 pm
இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த பணக்காரர்களும் பெரும் தொழிலதிபர்களும் நிறுவனங்களும் தங்களது சொத்துகளுக்கு சொந்த நாட்டில் வரி செலுத்துவதிலிருந்து தப்புவதற்காக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் கணக்கு வைத்து அங்கு கருப்புப் பணத்தைப் பதுக்கி வைக்கின்றனர். இவர்களைப் பற்றிய விவரங்கள் அந்நாட்டு அரசால் வெளியிடப்படாமல் பாதுகாக்கப்படுவதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அங்கு அதிகளவில் கருப்புப் பணம் பதுக்கப்படுகிறது.
Samayam Tamil swiss


சுவிஸ் வங்கிகளில் கொட்டிக் கிடக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி, இந்தியா - சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையேயான தகவல் மாற்றப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (AEOI) அடிப்படையில், சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை வெளியிட அந்நாட்டு அரசு ஒப்புதல் தெரிவித்து அதன்படி விவரங்களை வழங்கி வருகிறது.

எல்லாருக்கும் சம்பளம் உயர்வு... எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?
2020ஆம் ஆண்டில் மட்டும் இந்தியர்கள் 2.55 பில்லியன் சுவிஸ் ஃபிரான்க்ஸ் மதிப்பில் சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.20,700 கோடி. இந்தியாவைச் சேர்ந்த வங்கிக் கிளைகள் மற்றும் இதர நிதி நிறுவனங்கள் வாயிலாக இந்தப் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியர்கள் டெபாசிட் செய்திருந்த பணம் ரூ.6,625 கோடியாக மட்டுமே இருந்தது.

கடந்த 13 ஆண்டுகளிலேயே 2020ஆம் ஆண்டில்தான் இந்தியர்களின் டெபாசிட் பணம் இவ்வளவு அதிகமாக உயர்ந்திருக்கிறது. முன்னதாக 2006ஆம் ஆண்டில் 6.5 பில்லியன் சுவிஸ் ஃபிரான்க்ஸ் மதிப்புக்கு டெபாசிட் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்