ஆப்நகரம்

பிரபல வங்கிகளுக்கு அபராதம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

இந்தியாவின் இரண்டு பிரபலமான வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி பல கோடி அபராதம் விதித்துள்ளது.

Samayam Tamil 9 Jul 2022, 3:29 pm
வங்கி விதிமுறைகளையும் சட்ட திட்டங்களையும் மீறும் வங்கிகள் மீது மத்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல, நிதி நெருக்கடியால் தொடர்ந்து இயங்க முடியாமல் தவிக்கும் வங்கிகளை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் எடுப்பதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பதும் வழக்கமான நடவடிக்கைதான். அந்த வகையில் இரண்டு முன்னணி வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி கடுமையான அபராதம் விதித்துள்ளது.
Samayam Tamil rbi


ஃபெடரல் வங்கிக்கு ரூ.5.72 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கும் ரூ.70 லட்சம் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளும் நடவடிக்கையில் (கேஒய்சி) முறைகேடு செய்ததாகவும் விதிமுறைகளை மீறியதாகவும் இந்த வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஃபெடரல் வங்கியைப் பொறுத்தவரையில் காப்பீட்டு தரகு மற்றும் கார்பரேட் ஏஜென்சி சேவைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு ஊக்கத்தொகை வழங்காத விவகாரத்தில் சிக்கியுள்ளது. இவ்விரண்டு வங்கிகளும் ரிசர்வ் வங்கியிடம் சிக்கிய பிறகு இவற்றின் சொத்து, வங்கிச் சேவை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ரயில் பயணிகளுக்கு பெரிய அதிர்ச்சி.. சாப்பாடு விலை இவ்வளவா? காரணம் இதுதான்!

வங்கிகள் மீதான இந்த நடவடிக்கையானது விதிமுறை மீறல்கள் தொடர்பானது மட்டுமே எனவும், வாடிக்கையாளர் சேவை மற்றும் முதலீடு, கடன்களில் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனினும் இவ்வங்கிகள் மீது இவ்வளவு பெரிய அபராதம் விதிக்கப்பட்டது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்