ஆப்நகரம்

ஜிஎஸ்டி இழப்பீடு: அள்ளிக் கொடுத்த அரசு... தமிழகத்துக்கு எவ்வளவு?

ஜிஎஸ்டி இழப்பீட்டின் கீழ் மாநிலங்களுக்கு ஆறாவது தவணையாக ரூ.6,000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

Samayam Tamil 10 Dec 2020, 5:49 pm
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்தில் 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 1ஆம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. இந்த வரி முறையில் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு இழப்பீடு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாநிலங்களின் ஆண்டு வருவாய் வளர்ச்சி 14 சதவிகிதத்தை விடக் குறைவாக இருந்தால் மத்திய அரசு அதற்கான இழப்பீட்டை வழங்கும். ஆனால் இந்த இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு முறையாக வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
Samayam Tamil gst


தற்போதைய கொரோனா நெருக்கடி சமயத்தில் மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 1 முதல் தற்போது வரையிலான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் அனுப்பினர். ஆனாலும் இழப்பீட்டுத் தொகையை வழங்காமல், மாநிலங்களுக்கு கடன் வாங்க மாற்றுத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது. மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்குவதற்காக மத்திய அரசு கடன் சந்தைகளில் இருந்து ரூ.6,000 கோடியைக் கடனாக வாங்கியுள்ளது.

ரோஜ்கார் வேலைவாய்ப்புத் திட்டம்: அரசு ஒப்புதல்!

ஆறாவது தவணையாக தற்போது வழங்கப்பட்டுள்ள ரூ.6,000 கோடியில், ரூ.5,516.60 கோடித் தொகை 23 மாநிலங்களுக்கும், ரூ.483.40 கோடி ஜிஎஸ்டி கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள சட்டசபையுடன் கூடிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கும் (தில்லி, ஜம்மு & காஷ்மீர், புதுச்சேரி) வழங்கப்பட்டுள்ளது. அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி முறையை செயல்படுத்தியதால் எந்தவிதமான வருவாய் பாதிப்பும் இல்லை. இதுவரையில், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கான சிறப்பு சாளரத்தின் கீழ் ரூ.36,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது வழங்கப்பட்டுள்ள தொகையில், தமிழகத்துக்கு ரூ.9627 கோடி கடனாகப் பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.2511.68 கோடி இது வரை கடனாக வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்