ஆப்நகரம்

இந்தியாவில் தலைவிரித்தாடும் வறுமை.. ஏழைகளையும் கொஞ்சம் பாருங்க.. RSS பொதுச் செயலாளர் அதிரடி!!

இந்தியாவில் 23 கோடிக்கும் அதிகமான மக்கள் நாளொன்றுக்கு ரூ.357க்கும் குறைவான ஊதியம் பெறுகின்றனர் என்று ஆர்எஸ்எஸ் இன் பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.

Samayam Tamil 3 Oct 2022, 4:11 pm
இந்தியாவில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, நிறுவனங்கள் மூடல், அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், கட்டுக்குள் வராத பணவீக்கம் அதிகரித்து வருகிறது.
Samayam Tamil RSS General Sec


அதுமட்டுமில்லாமல் பல நிறுவனங்களின் மூடல் மற்றும் வேலைக் குறைப்பு காரணமாக பல காரணங்களால் பல லட்சம்பேர் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். அத்யாவசிய பொருட்களின் விலையேற்றம் கரணமாக நடுத்தரவர்க மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக் குறியாக உள்ளது.

சமீபத்தில் ஆர்எஸ்எஸ்-இணைந்த சுதேசி ஜாக்ரன் மஞ்ச் அதன் ஸ்வாவலம்பி பாரத் அபியானின் வெப்பினாரில் பங்கேற்ற RSS இன் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே நாட்டின் வேலைவாய்ப்பின்மை, ஏற்றத்தாழ்வுகள், அதிகரிக்கும் வறுமை கவலைக் கொள்ள வைப்பதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய தத்தாத்ரேயா தற்சமயம் இந்தியாவில் 20 கோடி மக்கள் இன்னும் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கிறார்கள் என்றும், அதில் 23 கோடி பேர் நாள் ஒன்றுக்கு ரூ.375க்கும் குறைவாகவே வருமானம் ஈட்டுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

மேலும் நாட்டில் நான்கு கோடி பேர் வேலையில்லாமல் உள்ளனர். தொழிலாளர் படை கணக்கெடுப்பின்படி நாட்டில் வேலையின்மையைச் சேர்ந்தவர்கள் 7.6% உள்ளனர் என்றும் கூறி இந்தக் கணக்கெடுப்பு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

ஹோசபலே தனது உரையில், நகர்ப்புறத்திலிருந்து கிராமப்புறத்திற்கு திறன்-பயிற்சியை எடுத்துச் செல்வதன் அவசியத்தைத் தவிர, தொழில்முனைவோர் நட்பு சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய நகரங்கள் வளர்வருவது மட்டும் வளர்ச்சி அல்ல, கிராமப்புறங்களில் உள்ள சிறு தொழில்களை வளர்த்து வேலைவாய்ப்பை உண்டாக்கி ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவும் திட்டங்கள் வேண்டும் எனவும் தத்தாத்ரேயா கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்