ஆப்நகரம்

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.. மத்திய அரசுக்கு ஆர்.எஸ்.எஸ். அழுத்தம்!

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 4 Dec 2022, 4:03 pm
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்துள்ளனர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரதிநிதிகள்.
Samayam Tamil rss trade bodies urge union finance ministry to implement old pension scheme at budget consultation meet
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.. மத்திய அரசுக்கு ஆர்.எஸ்.எஸ். அழுத்தம்!


​பட்ஜெட்

2023ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணிகளை மத்திய நிதியமைச்சகம் தொடங்கிவிட்டது. இதற்காக கடந்த நவம்பர் 21ஆம் தேதி முதல் நவம்பர் 29ஆம் தேதி வரை பல தரப்புகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

​மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்

இந்த ஆலோசனைக் கூட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த தொழிற்சங்கங்களும் தங்கள் கருத்துகளை அரசிடம் முன்வைத்துள்ளன. அதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தரப்பு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

​பழைய ஓய்வூதிய திட்டம்

2003ஆம் ஆண்டு வரை அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. பின்னர் 2004ஆம் ஆண்டில் தேசிய பென்சன் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

​ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கோரிக்கை

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

​கிசான் பணம் உயர்வு

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், பணவீக்கத்துடன் இணைக்கப்பட வேண்டும் எனவும் ஆர்.எஸ்.எஸ். தொழிற்சங்கமான பாரதிய கிசான் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

​இறக்குமதி பொருட்கள்

சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை உயர்ந்துகொண்டே வரும் சூழலில், இறக்குமதி பொருட்கள் மீதான வரியை உயர்த்த வேண்டும் எனவும், இந்தியாவை சுய சார்புடைய நாடாக மாற்ற வேண்டும் எனவும் ஆர்.எஸ்.எஸ். தொழிற்சங்கம் சுதேசி ஜக்ரன் மாஞ்ச் வலியுறுத்தியுள்ளது.

​பழைய ஓய்வூதிய திட்டத்தால் சுமை

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். எனினும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தினால் எதிர்கால சந்ததியினருக்கு சுமை உயரும் என மத்திய அரசுக்கான பொருளாதார ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்