ஆப்நகரம்

சிறு நிறுவனங்களுக்கு உதவ ரூ.10,000 கோடி!

கொரோனாவால் முடங்கியுள்ள சிறு குறு நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ரூ.10,000 கோடி நிதியுதவி விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 18 Apr 2020, 5:33 pm
கொரோனா பீதியால் மே 3ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15ஆம் தேதியில் இயல்பு நிலை திரும்பிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் பொதுமக்களும் தொழில் நிறுவனங்களும் பெரும் உலைச்சலுக்கு ஆளாகியுள்ளன. இதனால் அரசு தரப்பிலிருந்து பொருளாதாரச் சலுகைகளைப் பொதுமக்களும் தொழில் துறையினரும் எதிர்நோக்கியுள்ளனர். கடந்த மாதம் ரூ.1.7 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டதைப் போல, மற்றுமொரு அறிவிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
Samayam Tamil சிறு நிறுவனங்களுக்கு உதவ ரூ10000 கோடி


இதுபோன்ற சூழலில் மத்திய ரிசர்வ் நேற்று வெளியிட்டிருந்த அறிவிப்பில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடனுதவிகள் கிடைக்கும் வகையில் ரூ.50,000 கோடி மதிப்பிலான சிறப்புத் திட்டத்தை அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு மிகவும் பயனளிப்பதாக இருக்கும் எனவும், பணப்புழக்கம் அதிகரித்து வளர்ச்சி மேம்படும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.

இந்தியாவுக்கு உதவும் வால்மார்ட்: ரூ.46 கோடி நிதியுதவி!

இந்நிலையில், ஏற்றுமதியில் ஈடுபடும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், ரூ.10,000 கோடி நிதியுதவி அரசு தரப்பிலிருந்து விரைவில் வழங்கப்படும் என்று சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சரான நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை: தொடர்ந்து குறையும் தங்கம்!

இதற்கான ஒப்புதலை நிதியமைச்சகம் வழங்கிவிட்ட நிலையில், விரைவில் மத்திய அமைச்சரவையிடமும் ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்தப்படும் என்று நிதின் கட்கரி கூறியுள்ளார். இதுகுறித்து நேற்று (ஏப்ரல் 17) தொழில் துறையினரிடையே வீடியோ கான்பெரன்ஸ் வாயிலாகப் பேசிய கட்கரி, முறையாக ஜிஎஸ்டி செலுத்தும் நிறுவனங்களுக்கு இந்த நிதியுதவி சென்றுசேரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்