ஆப்நகரம்

கொரோனா நிவாரணம்: 13 கோடிப் பெண்களுக்கு நிதியுதவி!

இதுவரையில் 13.76 கோடிப் பெண்களுக்குக் கொரோனா நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 6 May 2020, 8:59 pm
கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு பொருளாதாரச் சலுகைகளை மார்ச் 26ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள், ஏழை - மூத்த குடிமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ரொக்க உதவிகள் மற்றும் உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த உதவிகளை வழங்குவதில் மத்திய, மாநில அரசுகள் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகின்றன. டிஜிட்டல் பணப் பட்டுவாடா வசதியைப் பயன்படுத்தி, மே 5 ஆம் தேதி வரையில் 39 கோடி பேருக்கு ரூ.34,800 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil jan dhan


இதில் குறிப்பாக, ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் மொத்தம் 13.76 கோடிப் பயனாளிகளுக்கு மே 5 வரையில் ரூ.12,810 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. முதல் தவணை உதவித் தொகையாக 20.05 கோடிப் பெண்களுக்கு ரூ.10,025 கோடி வழங்கப்பட்டது. இரண்டாவது தவணைக்காக, மே 5 ஆம் தேதி வரையில் 5.57 கோடிப் பெண்களுக்கு ரூ.2,785 கோடி செலுத்தப்பட்டுள்ளது. ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் 8.72 கோடி பணப் பரிவர்த்தனைகளின் கீழ் இத்தொகை செலுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் வரி உயர்வால் அரசுக்கு என்ன லாபம்?

இதுமட்டுமல்லாமல், முதியோர் ஓய்வூதியர், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையாக 2.82 கோடிப் பேருக்கு ரூ.1405 கோடி வழங்கப்பட்டுள்ளது. கட்டடங்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் 2.20 கோடி பேருக்கு ரூ.3492.57 கோடி அளவிலான நிதியுதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்கிலிருந்து, திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத வகையில் 9.6 லட்சம் உறுப்பினர்கள் தங்களது கணக்குகளிலிருந்து ரூ.2985 கோடி அளவுக்கு பணம் எடுத்துள்ளனர்.
44.97 லட்சம் தொழிலாளர்களுக்கான 24 சதவீத தொழிலாளர் வருங்கால நிதித் திட்ட பங்களிப்பாக ரூ.698 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்