ஆப்நகரம்

கொரோனாவை ஒழிக்கும் போராட்டத்தில் குவியும் நிதி!

இந்தியாவிலிருந்து கொரோனாவை ஒழிக்கும் போராட்டத்தில் உதவும் வகையில் இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகம் உள்ளிட்ட மூன்று அமைப்புகள் ரூ.29 கோடி நிதியுதவி வழங்கியுள்ளன.

Samayam Tamil 10 Apr 2020, 11:11 pm
ஒட்டுமொத்த உலகத்தையே ஆட்டம்காண வைத்துள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil கொரோனாவை ஒழிக்கும் போராட்டத்தில் குவியும் நிதி

கொரோனா நோயைக் கட்டுப்படுத்தவும் நிவாரணம் வழங்கவும் ’PM CARES Fund’ எனப்படும் பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதி 2020 மார்ச் 28ஆம் தேதி உருவாக்கப்பட்டது.

குறிப்பிட்ட நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட இந்த நிதியானது கொரோனா நோய்த் தொற்றால் உருவாகும் கடினமான சூழ்நிலையைச் சமாளிக்கவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு தொழில் நிறுவனங்களும் அரசு அமைப்புகளும் தங்களால் முடிந்த நிதியுதவியை வழங்கி வருகின்றன. இந்நிலையில், இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகம், இந்திய கம்பெனி செகரட்டரிகள் கழகம் மற்றும் இந்திய காஸ்ட் அக்கவுண்டண்ட்ஸ் கழகம் இணைந்து PM CARES நிதியில் இன்று ரூ.28.80 கோடி வழங்கியுள்ளன.

இந்தியாவைக் காப்பாற்ற வரும் ஆசிய மேம்பாட்டு வங்கி!

இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகத்தின் சார்பாக ரூ.15 கோடியும், அதன் ஊழியர்கள் சார்பாக ரூ.6 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. இந்திய கம்பெனி செகரட்டரிகள் கழகம் சார்பாக ரூ.5 கோடியும், அதன் ஊழியர்கள் சார்பாக ரூ.25 லட்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய காஸ்ட் அக்கவுண்டண்ட்ஸ் கழகம் சார்பாக ரூ.2.5 கோடியும், அதன் ஊழியர்கள் சார்பாக ரூ.5 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் மங்கிப் போன நகை விற்பனை!

இந்த அமைப்புகள் கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் நிபுணர்களின் அமைப்புகளாக உள்ளன. தற்போது வழங்கப்பட்டுள்ள நிதியைக் கொண்டு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்துமாறும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்