ஆப்நகரம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: எவ்வளவு தெரியுமா?

அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் எவ்வளவு உயரும் என்ற கணக்கீடு இதோ..

Samayam Tamil 14 Jan 2022, 2:55 pm
7ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தற்போது 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு பிரச்சினைகளால் 2020ஆம் ஆண்டில் அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் அடுத்தடுத்து உயர்த்தப்பட்டு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Samayam Tamil DA hike


இந்நிலையில், மேலும் மகிழ்ச்சி தரும் விதமாக இந்த ஜனவரி மாதத்தில் இன்னொரு உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த முறை அகவிலைப்படி 2 சதவீதம் அல்லது 3 சதவீதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

அகவிலைப்படி உயர்த்தப்பட்ட பின்னர் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் எவ்வளவு உயரும் என்ற கணக்கீட்டை இங்கே பார்க்கலாம்.

அடிப்படை சம்பளம் = ரூ.16,000

31 சதவீத அகவிலைப்படி = ரூ.5,580 (மாதத்துக்கு)

34 சதவீத அகவிலைப்படி = ரூ.6,120 (மாதத்துக்கு)

உயர்வு =6,120 - 5,580 = 540

மொத்த சம்பள உயர்வு - 540 x 12 = ரூ.6,480

அடிப்படை சம்பளம் = ரூ.56,900

31 சதவீத அகவிலைப்படி = ரூ.17,639 (மாதத்துக்கு)

34 சதவீத அகவிலைப்படி = ரூ.19,346 (மாதத்துக்கு)

உயர்வு = 19,346 - 17,639 = 1,707

மொத்த சம்பள உயர்வு - 1,707 x 12 = ரூ.20,484

இதேபோல, அடிப்படை சம்பளத் தொகையைப் பொறுத்து 34 சதவீத அகவிலைப்படி உயர்வுடன் கணக்கிட்டு மொத்த சம்பள உயர்வு எவ்வளவு என்று பார்க்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்