ஆப்நகரம்

Green Bonds: பசுமை பத்திரங்கள் அடுத்த விற்பனை எப்போது? நல்ல வருமானம் கிடைக்கும்!

பசுமை பத்திரங்களின் அடுத்த விற்பனை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 7 Feb 2023, 12:01 pm
புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கார்பன் குறைப்பு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பசுமை திட்டங்களில் முதலீடு செய்வதற்காக பசுமை பத்திரங்களை (Green Bonds) இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த பத்திரங்கள் விற்பனை வாயிலாக கிடைக்கும் தொகை பசுமை திட்டங்களில் முதலீடு செய்ய பயன்படுத்தப்படுகிறது.
Samayam Tamil green bonds
green bonds


முதற்கட்டமாக ஜனவரி 25ஆம் தேதி 8000 கோடி ரூபாய் மதிப்பிலான பசுமை பத்திரங்களை இந்திய அரசு விற்பனை செய்துவிட்டது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 9ஆம் தேதி இன்னொரு 8000 கோடி ரூபாய் மதிப்பிலான பசுமை பத்திரங்கள் விற்பனைக்கு வருகின்றன.

பசுமை பத்திரங்களை ஏலம் வாயிலாக ரிசர்வ் வங்கி விற்பனை செய்கிறது. நடப்பு நிதியாண்டில் விற்பனை செய்யப்படும் 5 ஆண்டு பசுமை பத்திரத்துக்கு 7.10% வட்டியும், 10 ஆண்டு பசுமை பத்திரத்துக்கு 7.29% வட்டியும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் 2023-24ஆம் நிதியாண்டில் செப்டம்பர் மாதத்துக்குள் அடுத்த பசுமை பத்திரம் விற்பனை நடைபெறும் என அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் மட்டும் 15000 கோடி முதல் 16000 கோடி ரூபாய்க்கு பசுமை பத்திரங்களை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த பசுமை பத்திரம் விற்பனை வாயிலாக திரட்டப்படும் நிதி சோலார் மின்சக்தி, நீர் மின்சக்தி, காற்று மின்சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின்சக்தி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். பசுமை பத்திரங்கள் வாயிலாக திரட்டப்படும் நிதியை நிலக்கரி எடுப்பு, அனல் மின்சக்தி போன்ற திட்டங்களுக்கு பயன்படுத்த முடியாது.

வரும் நிதியாண்டில் மார்க்கெட் வழியாக எப்போதும் இல்லாத அளவுக்கு 15.43 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குவதற்கு பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இதில் பசுமை பத்திரங்களின் பங்கு எவ்வளவு என்பது பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்