ஆப்நகரம்

ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கட்டணம்... மக்களிடம் வசூலிக்கும் வங்கிகள்!!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பணப் பரிவர்த்தனைகளுக்கான விதிமுறைகள் மற்றும் கூடுதல் கட்டணம் குறித்து வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

Samayam Tamil 15 May 2021, 4:00 pm
வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை (மினிமம் பேலன்ஸ்) என்ற பெயரில் குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்து வைத்திருக்க வேண்டும். மினிமம் பேலன்ஸ் எவ்வளவு இருக்க வேண்டும், அதற்குக் குறைந்தால் வசூலிக்கப்படும் அபராதம் எவ்வளவு, போன்ற விதிமுறைகள் வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. தனியார் மற்றும் அயல்நாட்டு வங்கிகள் 600 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கின்றன. 15 ரூபாய் தொடங்கி ஒவ்வொரு வங்கிக்கு ஏற்ப அபராதத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil sbi


மெட்ரோ நகரங்கள், நடுத்தர நகரங்கள் மற்றும் கிராமங்கள் என கணக்கு வைத்திருக்கும் வங்கியின் இருப்பிடத்தைப் பொருத்து குறைந்தபட்ச இருப்புத்தொகை மற்றும் அபராதம் மாறுகிறது. அதேபோல, வங்கிக் கணக்கின் மினிமம் பேலன்ஸ் வரம்பைப் பொறுத்து எத்தனை முறை இலவசமாகப் பணப் பரிவர்த்தனை செய்யலாம் என்ற விதிமுறைகளை வங்கிகள் செயல்படுத்தி வருகின்றன. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பொறுத்து, மாதாந்திரப் பரிவர்த்தனைகளுக்கான கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளது.

விவசாயிகளுக்கு நாளை ரூ.2,000 கிடைக்கும்! உடனே செக் பண்ணுங்க!

அதன்படி, சேமிப்புக் கணக்கின் மாதாந்திர குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.25,000 வரையில் இருந்தால், அந்தக் கணக்கிலிருந்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம்மில் 5 பரிவர்த்தனைகளை இலவசமாக மேற்கொள்ளலாம். அதேபோல, மற்ற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் மெட்ரோ நகரங்களில் 3 முறையும், மற்ற நகரங்களில் 5 முறையும் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம். அதேபோல, சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச இருப்புத்தொகை ரூ.25,000 முதல் ரூ.50,000 வரையில் இருந்தால் இலவசமாக மேற்கொள்ளலாம். மேலும், ரூ.1 லட்சம் வரையில் மினிமம் பேலன்ஸ் உள்ள வங்கிக் கணக்கிலிருந்து எந்த வங்கி ஏடிஎம்மிலும் எத்தனை முறை பணம் எடுத்தாலும் இலவசம்தான்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்