ஆப்நகரம்

எஸ்பிஐ மினிமம் பேலன்ஸ்; இதுவரையில் ரூ.1771 கோடி அபராதம்

பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளா்களில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை என்று கூறி, ரூ. 1771 கோடியை அபராதமாக பிடித்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 30 Dec 2017, 1:40 am
பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளா்களில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை என்று கூறி, ரூ. 1771 கோடியை அபராதமாக பிடித்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil sbi collects rs1771 crore said shivprathap shukla
எஸ்பிஐ மினிமம் பேலன்ஸ்; இதுவரையில் ரூ.1771 கோடி அபராதம்


இந்தியாவின் முன்னணி வங்கியான எஸ்.பி.ஐ. வங்கி தனது வங்கியில் கணக்கு வைத்திருப்போா் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை கட்டாயமாக்கியது.

அதன்படி குறைந்த பட்ச இருப்புத் தொகையானது 3 பிாிவுகளாக வகைப்படுத்தப்பட்டது. அந்த வகையில் பெருநகரங்களில் உள்ள வங்கி கிளைகளில் ரூ. 5 ஆயிரமும், நகரங்களில் உள்ள வங்கி கிளைகளில் ரூ. 3 ஆயிரமும், கிராமப்புற பகுதிகளில் உள்ள வங்கி கிளைகளில் ஆயிரம் ரூபாயும் குறைந்தபட்ச தொகையாக நிா்ணயிக்கப்பட்டது.

ஒரு மாத காலத்தில் இருப்பு தொகைக்கும் குறைவான அளவில் பாிவா்த்தனை மேற்கொண்டால் அபராதத் தொகை வசூலிக்கப்படும் என்று தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்களின் வங்கி கணக்குகளில் இருந்து அபராதம் என்ற பெயாில் இதுவரை எஸ்.பி.ஐ. வங்கி 1771 கோடி ரூபாயை எடுத்திருப்பதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சா் ஷிவ்பிரதாப் சுக்லா தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்