ஆப்நகரம்

நாட்டை விட்டு ஓடிய கடனாளிகள்: நான்கு ஆண்டுக்குப் பிறகு விசாரணை!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளிடம் கடன் வாங்கிவிட்டு நாட்டை விட்டே தப்பியோடிய மூன்று தொழிலதிபர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

Samayam Tamil 9 May 2020, 4:29 pm
டெல்லியைச் சேர்ந்த ராம் தேவ் இண்டர்நேஷன்ல் என்ற பாஸ்மதி அரிசி ஏற்றுமதி நிறுவனத்திற்கு எதிராக இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, மத்திய புலனாய்வு அலுவலகத்தில் (சிபிஐ) புகார் அளித்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உட்பட ஆறு வங்கிகளிடம் ரூ.414 கோடியைக் கடனாகப் பெற்ற ராம் தேவ் இண்டர்நேஷனல் நிறுவனம் அதைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்துள்ளது. அந்நிறுவனத்தின் புரோமோட்டர்களான நரேஷ் குமார், சுரேஷ் குமார், சங்கீதா ஆகிய மூவரும் குற்றம் கண்டறியப்படுவதற்கு முன்னரே நாட்டை விட்டே தப்பியோடியுள்ளது தெரியவந்துள்ளது.
Samayam Tamil sbi cbi


சிபிஐயிடம் அளிக்கப்பட்டுள்ள புகாரைத் தொடர்ந்து, ராம் தேவ் இன்டர்நேஷனல் நிறுவனம் பெற்ற கடன் 2016 ஆம் ஆண்டிலேயே வாராக் கடனாக மாறிவிட்டதாகவும், அதன் முன்னரே அவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச்சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் 2020 பிப்ரவரி 25ஆம் தேதிதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராம் தேவ் இண்டர்நேஷனல் நிறுவனம் பெற்ற கடன் 2016ஆம் ஆண்டிலேயே வாராக் கடனாக மாறிவிட்ட நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது ஏன் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நல்ல சேதி சொன்ன காக்னிசண்ட்: 20,000 பேருக்கு வேலை!

தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் விசாரணைப் பணி தாமதமாகியுள்ளதாகவும், இயல்புநிலை திரும்பியவுடன் முழு விசாரணை தொடங்கும் எனவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு வங்கிகள் வழங்கியுள்ள ரூ.441 கோடி கடனில், எஸ்பிஐ ரூ.173.11 கோடி, கனரா வங்கி ரூ.76.09 கோடி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.64.31 கோடி, ஐடிபிஐ வங்கி ரூ.12.27 கோடி, செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.51.31 கோடி, கார்பரேஷன் பேங்க் ரூ.36.91 கோடி என்ற அளவில் கடன் வழங்கியுள்ளன.

தமிழ்நாட்டுக்கு உதவிய சாம்சங்: ரூ.2 கோடி நன்கொடை!

கடன் மோசடி கண்டறியப்பட்டவுடன் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு இந்நிறுவனத்தின் ஆலை மற்றும் இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மோசடியாளர்களின் வீடுகளைச் சோதனையிட்டபோது அவர்கள் நாட்டை விட்டே தப்பிச் சென்றதும் பின்னர் தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்