ஆப்நகரம்

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கதறல்.. அவமானமா போச்சு.. பணம் அனுப்ப முடியாமல் வேதனை!

யுபிஐ, நெட் பேங்கிங், யோனோ போன்ற சேவைகளை பயன்படுத்த முடியவில்லை என எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் புகார்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 3 Apr 2023, 3:27 pm
SBI Server down: எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் யுபிஐ பரிவர்த்தனை, யோனோ பேங்கிங், நெட் பேங்கிங் போன்ற சேவைகளை பயன்படுத்த முடியவில்லை எனவும், அனைத்து தளங்களும் முடங்கி கிடப்பதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
Samayam Tamil SBI
SBI


டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பயன்பாடு இயல்பாகிவிட்ட காலகட்டத்தில் 2 நாட்களாக எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியவில்லை எனவும், இதனால் பணம் அனுப்ப முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் புகார் கூறி வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல், எஸ்பிஐ வங்கியின் மொபைல் பேங்கிங் ஆப் யோனோ (YONO app) வழியாகவும் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியவில்லை என சமூக வலைதளங்களில் ஏராளமான எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுபோக, எஸ்பிஐ வங்கியின் இணையதளம் திறக்காமலேயே முடங்கி கிடக்கிறது. இதனால் நெட் பேங்கிங் வசதி வாயிலாகவும் பணம் அனுப்ப முடியாமல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து ஏராளமான எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்து வருகின்றனர்.

ஏப்ரல் 1ஆம் தேதி மட்டும் பிற்பகல் 1.30 மணி முதல் 4.45 மணி வரை நெட் பேங்கிங், யோனோ, யுபிஐ போன்ற சேவைகளை பயன்படுத்த முடியாது என எஸ்பிஐ வங்கி ஏற்கெனவே தெரிவித்திருந்தது. ஆனால், இரண்டு நாட்கள் ஆகியும் இன்னும் கூட யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வசதியை கூட பயன்படுத்த முடியாமல் இருப்பதாக வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் குறை தெரிவித்து வருகின்றனர்.

அவசர தேவைகளுக்கு பணம் அனுப்புவதற்கு கூட வழி இல்லாமல் பெரிய அவமானமாகிவிட்டதாகவும், கிட்டத்தட்ட 4 நாட்களாக இந்த பிரச்சினையை எஸ்பிஐ வங்கி சரிசெய்யாமல் காலம் கடத்தி வருவதாகவும் சில வாடிக்கையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலேயே மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் 45 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எனவே, எஸ்பிஐ வங்கியில் இதுபோன்ற சிக்கல்கள், கோளாறுகள் ஏற்படும்போது அது பெருவாரியான மக்களை நேரடியாகவே பாதிக்கிறது.



எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்