ஆப்நகரம்

இந்த நம்பருக்கு வாட்ஸப் மெசேஜ் செய்தால் வீட்டுக்கே ஏடிஎம் வரும்!

எஸ்பிஐ வங்கியின் புதிய மொபைல் ஏடிஎம் திட்டத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி பார்க்கலாம்.

Samayam Tamil 25 Aug 2020, 12:39 pm
கொரோனா பொதுமுடக்கத்திற்கு மத்தியில் மக்கள் வேலைவாய்ப்பு, தொழில் என வாழ்வாதார சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். மறுபுறம், வங்கியில் இருக்கும் பணத்தை எடுப்பதும் பெரிய சிக்கலாக இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே வங்கிக்கு செல்வது பாதுகாப்பில்லை. ஆனால், ஏடிஎம்களிலும் பணம் எடுக்க மக்கள் வரிசையில் நிற்கின்றனர்.
Samayam Tamil sbi doorstep atm service procedure and benefits
இந்த நம்பருக்கு வாட்ஸப் மெசேஜ் செய்தால் வீட்டுக்கே ஏடிஎம் வரும்!


​எஸ்பிஐ மொபைல் ஏடிஎம்?

இந்த சூழலில் மக்களின் பாதுகாப்பிற்காக நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, மக்கள் பணம் எடுக்க வங்கிக்கும் போகத் தேவையில்லை, ஏடிஎம் செல்லவும் தேவையில்லை. அதாவது, உங்கள் வீட்டிற்கே நேரடியாக ஏடிஎம் வந்துவிடும். ஈசியாக பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

​யாருக்கு பயன்?

எளிமையாக வாட்ஸப்பில் ஒரு மெசேஜ் செய்தாலோ, அழைப்பு விடுத்தாலோ வீட்டுக்கே ஏடிஎம் வந்துவிடும். முதற்கட்டமாக இத்திட்டம் லக்னோவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் இந்த வசதி அறிமுகமாக இருக்கிறது. முக்கியமாக, வயது முதியோர், நோயால் அவதிப்படுவோர், மாற்றுத்திறனாளிகள் என பல சாராருக்கும் இப்புதிய வசதி பேருதவியாக இருக்கும்.

​எப்படி பயன்படுத்துவது?

ஏடிஎம் வீட்டிற்கே வரவழைப்பதற்கு 7052911911 மற்றும் 776059264 ஆகிய எண்களுக்கு வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்ப வேண்டும். இந்த எண்களுக்கு நேரடியாக அழைப்பு விடுத்தாலும் வீட்டிற்கு ஏடிஎம் வரும். இதுபோக, அருகேயிருக்கும் வங்கிக் கிளைக்கு போன் செய்தும் வீட்டிற்கு ஏடிஎம்மை வரவழைத்து பயன்பெறலாம். கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இதுபோன்ற மொபைல் ஏடிஎம்கள் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்