ஆப்நகரம்

Home Loan பணத்தை நிறைய சேமிக்கலாம்.. இந்த ஆஃபரை விட்றாதிங்க!

எஸ்பிஐ வங்கி பண்டிகைக் கால சலுகையில் தள்ளுபடியுடன் வீட்டுக் கடன் வாங்கலாம்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 4 Dec 2022, 12:14 pm
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ (SBI) வங்கிக்கு நாடு முழுவதும் 47 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றன. எஸ்பிஐ வங்கி கடந்த அக்டோபர் மாதம் பண்டிகைக் கால கடன் சலுகையை அறிவித்தது. இந்த சலுகை தற்போதும் அமலில் உள்ளது.
Samayam Tamil SBI Home loan
SBI Home loan


இன்னும் இரு மாதங்களில், அதாவது 2023 ஜனவரி 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களை வங்க விரும்புவொர் வட்டி சலுகையுடன் எஸ்பிஐ வங்கியிலேயே பண்டிகைக்கால கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற்றுக்கொள்ளலாம்.

என்னென்ன சலுகைகள்?

இந்த பண்டிகைக் கால சலுகையில் எஸ்பிஐ வங்கி கடன்களுக்கு 0.15% முதல் 0.30% வரை வட்டித் தள்ளுபடி வழங்குகிறது. எனவே வீட்டுக் கடன், வாகன கடன், பர்சனல் கடன் போன்றவை மிக குறைந்த வட்டிக்கு கிடைக்கிறது.

வருமான வரி செலுத்துவோருக்கு கடைசி வாய்ப்பு.. அபராதமும் கட்டாயம் செலுத்தனும்!
வீட்டுக் கடன்

குறிப்பாக, எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் வட்டி விகிதம் 8.40% முதல் உயருகிறது. இதுமட்டுமல்லாம, வீட்டுக் கடன்களுக்கான பிராசஸிங் கட்டணத்தையும் (Processing fees) ரத்து செய்கிறது எஸ்பிஐ வங்கி. இதனால், கடன் வாங்குவோர் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.

வீட்டுக் கடன் வட்டி வேறுபாடு

எஸ்பிஐ வங்கியில் குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் வழங்கப்பட்டாலும், கடன் பெற விண்ணப்பிக்கும் நபரின் சிபில் ஸ்கோருக்கு (CIBIL Score) ஏற்ப வட்டி விகிதம் மாறுபடும். எவ்வளவுக்கு எவ்வளவு உங்கள் சிபில் ஸ்கோர் அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் கிடைக்கும்.

வீட்டுக் கடன் வட்டியும், சிபில் ஸ்கோரும்

உங்கள் சிபில் ஸ்கோர் 750 முதல் 799 வரை இருந்தால் உங்களுக்கான வீட்டுக் கடன் வட்டி விகிதம் 8.40%. வழக்கமான வட்டியை விட 0.25% தள்ளுபடி கிடைக்கிறது.

உங்கள் சிபில் ஸ்கோர் 700 முதல் 749 வரை இருந்தால் வீட்டுக் கடனுக்கு 8.55% வட்டி விகிக்கப்படும்.

சிபில் ஸ்கோர் 700க்கு கீழே இருந்தால் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. இவர்களுக்கு 8.85% முதல் வீட்டுக் கடன் விதிகப்படுகிறது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்