ஆப்நகரம்

SBI வாடிக்கையாளர்களுக்கு ரூ.4 லட்சம் இன்சூரன்ஸ்!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 342 ரூபாய் செலுத்தி 4 லட்சம் காப்பீடு பெறும் வசதி உள்ளது.

Samayam Tamil 27 Oct 2021, 2:57 pm
கொரோனா பிரச்சினை வந்த பிறகு நிறையப் பேர் இன்சூரன்ஸ் திட்டங்களில் அதிகமாக இணைந்துவருகின்றனர். சாதாரண ஏழை எளிய மக்களுக்குக் கூட இப்போது காப்பீட்டின் முக்கியத்துவம் தெரியவந்துள்ளது. இதனால் ஏதேனும் ஒரு காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து தங்களுக்கும் தங்களது குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்க நினைக்கின்றனர். பல்வேறு காப்பீட்டுத் திட்டங்கள் செயல்பாட்டில் இருந்தாலும் மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டமும், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா திட்டமும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.
Samayam Tamil sbi


இந்த இரண்டு திட்டங்களும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியிலேயே செயல்பாட்டில் உள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்தக் காப்பீட்டு உதவி கிடைக்கும். ஆண்டுக்கு மொத்தம் 342 ரூபாய் செலுத்தினாலே ரூ.4 லட்சம் வரையில் காப்பீட்டு உதவி பெறலாம். இத்திட்டத்துக்கான பிரீமியம் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலேயே ஆட்டோ டெபிட் முறையில் பிடிக்கப்பட்டுவிடும்.

இந்த காசு மட்டும் இருந்தா போதும்! ரூ.10 லட்சம் சம்பாதிக்கலாம்!
பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்தில் காப்பீடு செய்த நபர் விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது முழுவதும் ஊனமுற்றோராகிவிட்டாலோ அவருக்கு ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும். விபத்தில் பகுதி அளவு பாதிக்கப்பட்டிருந்தால் ரூ.1 லட்சம் காப்பீடு வழங்கப்படும். 18 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். இத்திட்டத்துக்கான வருடாந்திர பிரீமியம் ரூ.12 மட்டுமே.

அடுத்ததாக, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா திட்டத்தில் ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும். இதற்கான பிரீமியம் தொகை ரூ.330 ஆகும். 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கு இந்த உதவி கிடைக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்