ஆப்நகரம்

இனி நாம ஏடிஎம் போக வேண்டாம் - வீட்டுக்கே ஏடிஎம் வரும்!

வீட்டுக்கே வரக்கூடிய ஏடிஎம் சேவையை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

Samayam Tamil 23 Aug 2020, 10:59 am
கொரோனா லாக்டவுன் காலத்தில் மக்கள் வீட்டிலேயே அடைந்துகிடக்கின்றனர். மக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருப்பது பாதுகாப்பானதுதான் என்றாலும், ஏடிஎம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லவேண்டிய நிலை உள்ளது. இப்படி ஏடிஎம்களுக்கு செல்லும்போது கூட்டம் கூடுவதால் கொரோனா அச்சுறுத்தல் அதிகரிக்கலாம்.
Samayam Tamil sbi launches doorstep mobile atm service huge relief for people amid pandemic
இனி நாம ஏடிஎம் போக வேண்டாம் - வீட்டுக்கே ஏடிஎம் வரும்!


​இனி வீட்டுக்கே ஏடிஎம் வரும்

இந்நிலையில், மக்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, மக்கள் பணம் எடுக்க ஏடிஎம் போகத் தேவையில்லை. மாறாக, ஏடிஎம் உங்கள் வீட்டுக்கே வந்துவிடும்.

எப்படி பயன்படுத்துவது?

அதாவது, உங்களுக்கு பணம் எடுக்க வேண்டுமென்றால் எஸ்பிஐக்கு வாட்சப்பில் மெசேஜ் அனுப்பினாலும், போன் அழைப்பு விடுத்தாலும் நீங்கள் இருக்கும் இடத்திற்கே ஏடிஎம் வந்துவிடும். அதன் வாயிலாக ஈசியாகவும், பாதுகாப்பாகவும் பணம் எடுத்துக்கொள்ளலாம். இதற்கான அறிவிப்பை எஸ்பிஐ வங்கியின் தலைமை பொது மேலாளர் அஜய் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

​யாருக்கு பயன்?

தற்போது முதற்கட்டமாக உ.பி தலைநகர் லக்னோவில் மட்டும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் வீட்டிற்கே ஏடிஎம் சேவைகள் கொண்டுவரப்படவிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே பாதுகாப்பாக பணம் எடுக்க விரும்பும் மக்களுக்கு இது பெரிதும் உதவும். அதுபோக, வெளியே செல்ல முடியாத முதியோர், நோயால் அவதிப்படுவோருக்கு இது ஒரு வரப்பிரசாதம் எனலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்