ஆப்நகரம்

இருமடங்காக உயரும் வீட்டுக் கடன் மார்க்கெட்.. இன்னும் 5 வருஷத்தில் பாருங்க.. எஸ்பிஐ பரபரப்பு ரிப்போர்ட்!

இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் வீட்டுக் கடன் சந்தை இருமடங்காக உயரும் என எஸ்பிஐ ரிப்போர்ட் கூறுகிறது.

Samayam Tamil 11 Aug 2022, 4:12 pm
இந்தியாவில் வீட்டுக் கடன் சந்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருமடங்காக உயரும் என எஸ்பிஐ (SBI) வங்கி வெளியிட்டுள்ள ரிப்போர்ட்டில் தெரிவித்துள்ளது. அதாவது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் வீட்டுக் கடன் சந்தை 24 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
Samayam Tamil home loan


எஸ்பிஐ வங்கியின் மொத்த கடன்களில் வீட்டுக் கடன்களின் விகிதம் 2020 மார்ச் மாதம் 13.1% ஆக இருந்தது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் வீட்டுக் கடன்களின் விகிதம் 14.4% ஆக உயர்த்துள்ளது என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மூன்றாம் நிலை நகரங்கள் மற்றும் நான்காம் நிலை நகரங்களில் அதிக வீட்டுக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ ரிப்போர்ட் கூறுகிறது.

வட்டி விகிதம் தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில் பலரும் வீடுகள் மற்றும் ரியல் எஸ்டேட் சொத்துகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். எஸ்பிஐ வங்கி மட்டுமல்லாமல் பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ், பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வழங்கியுள்ள வீட்டுக் கடன்கள் அதிகரித்துள்ளன.

கடன் வட்டி விகிதம் உயர்வு.. பேங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு அலர்ட்!
எஸ்பிஐ வங்கியின் வீட்டுக் கடன்கள் 13.77% உயர்ந்துள்ளன. பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் வீட்டுக் கடன்கள் 96.20% உயர்ந்துள்ளன. ஐசிஐசிஐ வங்கியின் வீட்டுக் கடன்கள் 11.40% உயர்ந்துள்ளன. பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் வீட்டுக் கடன்கள் 15.30% உயர்ந்துள்ளன. ஆக்ஸிஸ் வங்கியின் வீட்டுக் கடன்கள் 18% உயர்ந்துள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்