ஆப்நகரம்

NEFT, RTGS charges: ரொக்கத்தை தவிர்க்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு - எஸ்பிஐ

ரிசர்வ் வங்கியின் கட்டண ரத்து அறிவிப்பால் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் என்.இ.எப்.டி. மற்றும் ஆர்.டி.ஜி.எஸ். பரிவர்த்தனைகளை பயன்படுத்துவதற்காக எந்தக் கட்டணத்தையும் ரிசர்வ் வங்கிக்குச் செலுத்த வேண்டாம்.

Samayam Tamil 12 Jul 2019, 4:37 pm
ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு பணத்தை ரொக்கமாக மாற்றுவதற்குப் செய்தற்குப் பதிலாக ஆன்லைனில் மாற்றும் வாடிக்கையாளர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி புதிய சலுகையைத் தருகிறது.
Samayam Tamil SBI-PO-2018-Admit-Card


வங்கிக் கணக்கிலிருந்து ரொக்கமாக பரிவரத்தனை செய்யாமல், ஆன்லைனில் பரிவத்தனை செய்யும்போது RTGS, NEFT ஆகிய முறைகள் பயன்படுகின்றன. இவற்றில் ரியல் டைம் செட்டில்மெண்ட் சிஸ்டம் (Real Time Gross Settlement System) என்பது பெரிய தொகைகளின் பரிவர்த்தனைக்கானது. நேஷனல் எலெக்ட்ரானிக் பண்டு டிரான்ஸ்பர் (National Electronic Funds Transfer) என்பது 2 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட தொகைகளின் பரிவர்த்தனைக்குரியது.


இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) என்.இ.எப்.டி. பரிவர்த்தனைக்கு 1 முதல் 5 ரூபாயும் ஆர்.டி.ஜி.எஸ். பரிவர்த்தனைக்கு 5 முதல் 50 ரூபாயும் வசூலித்து வருகிறது.

இந்தக் கட்டணத்தை வரும் ஆகஸ்ட் 1, 2019 முதல் முழுமையாக ரத்து செய்வதாக தற்போது அறிவித்துள்ளது. இதன் மூலம் யோனோ (Yono) மொபைல் ஆப், இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் வாயிலாக RTGS மற்றும் NEFT முறைகளில் இலவசமாக, எந்தக் கட்டணமும் இல்லாமல் பரிவர்த்தனை செய்யலாம்.


ரிசர்வ் வங்கி என்.இ.எப்.டி. மற்றும் ஆர்.டி.ஜி.எஸ். பரிவர்த்தனை சேவையை வழங்குவதற்கு வங்கிகளிடம் குறைந்தபட்ச கட்டணம் பெற்றுவருகிறது. வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு தாங்கள் வழங்கும் கட்டணத்தை ஈடுசெய்ய வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கின்றன.

ஜூன் 11ஆம் தேதி டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில், ஜூலை 1, 2019 முதல் ஆர்.டி.ஜி.எஸ். பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டணங்களும் (processing charges, time varying charges) என்.இ.எப்.டி. பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டணங்களும் (processing charges) முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன என ரிசர்வ் வங்கி அறிவித்தது. அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கட்டண ரத்து மூலம் கிடைக்கும் பலனை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. அந்த வகையில் எஸ்பிஐ முதலாவதாக இந்த முடிவை எடுத்துள்ளது.


ரிசர்வ் வங்கியின் கட்டண ரத்து அறிவிப்பால் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் என்.இ.எப்.டி. மற்றும் ஆர்.டி.ஜி.எஸ். பரிவர்த்தனைகளை பயன்படுத்துவதற்காக எந்தக் கட்டணத்தையும் ரிசர்வ் வங்கிக்குச் செலுத்த வேண்டாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்