ஆப்நகரம்

ரூ. 20,000 கோடி வாராக் கடன் தள்ளுபடி; எஸ்பிஐ

இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதி ஆண்டில் 20,339 கோடிக்கு வாராக் கடனை தள்ளுபடி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

Samayam Tamil 12 Feb 2018, 4:19 pm
இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதி ஆண்டில் 20,339 கோடிக்கு வாராக் கடனை தள்ளுபடி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
Samayam Tamil sbi wrote off bad loans worth over rs 20000 crore last fiscal tamil
ரூ. 20,000 கோடி வாராக் கடன் தள்ளுபடி; எஸ்பிஐ


கடந்த 2012-13ம் நிதியாண்டில், பொதுத்துறை வங்கிகள் சுமார் 27,231 கோடி ரூபாய் தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில், தற்போது இதன் அளவு 5 மடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இதே போல், பொதுத்துறை வங்கிகள், 2013-14 நிதியாண்டில் 34,409 கோடி ரூபாயும், 2014-15 நிதியாண்டில் 49,018 கோடி ரூபாயும், 2015-16 நிதியாண்டில் 57,585 கோடி ரூபாயும் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2016-17ம் ஆண்டில், 81,683 கோடி ரூபாயாக தள்ளுபடி செய்துள்ள நிலையில், தற்போது, பாரத ஸ்டேட் வங்கி, கடந்த நிதியாண்டில் 20,339 கோடி ரூபாய் வாராக் கடனை தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்