ஆப்நகரம்

எஸ்பிஐ வங்கியின் வாராக்கடன் சுமை அதிகரிப்பு

2015 முடிவில், எஸ்பிஐ வங்கியின் மொத்த வாராக்கடன் அளவு ரூ. 72,792 கோடியாக உயர்ந்துள்ளது.

TOI Contributor 24 Feb 2016, 6:54 pm
2015 முடிவில், எஸ்பிஐ வங்கியின் மொத்த வாராக்கடன் அளவு ரூ. 72,792 கோடியாக உயர்ந்துள்ளது.
Samayam Tamil sbis rs 11700 crore locked as bad loans with wilful defaulters
எஸ்பிஐ வங்கியின் வாராக்கடன் சுமை அதிகரிப்பு


பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அந்த வங்கிகளின் நிதிப்பற்றாக்குறை பாதிக்கப்பட்டு, புதிய வர்த்தகப் பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதற்காக, மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது.

இந்நிலையில், 2015ம் ஆண்டின் முடிவில், பொதுத்துறை வங்கிகளில், எஸ்பிஐ.,க்கு அதிகளவு வாராக்கடன் சுமை உள்ளதாக, தெரியவந்துள்ளது. இதுபற்றி, மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வில், 2015 முடிவில், அந்த வங்கியின் மொத்த வாராக்கடன் ரூ.72,792 கோடியாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், 1,164 வாடிக்கையாளர்கள் வேண்டுமென்றே கடனை திருப்பித்தரவில்லை என்றும், அவற்றின் மொத்த மதிப்பு மட்டும் ரூ.11,705 கோடி என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ்,விஜய் மல்லையா,யூபி ஹோல்டிங்க்ஸ் போன்றோர் இதில் முன்னிலையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்