ஆப்நகரம்

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.5 கோடி அபராதம்.. செபி அதிரடி உத்தரவு!

பங்கு சந்தை முறைகேடு விவகாரத்தில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதித்து செபி உத்தரவு.

Samayam Tamil 29 Jun 2022, 11:41 am
பங்குச் சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாகி சித்ரா ராமகிருஷ்ணா மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் அவர் பங்குச் சந்தை தொடர்பான ரகசிய தகவல்களை கசியவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Samayam Tamil chitra ramkrishna


இவ்வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. ஏற்கெனவே சித்ரா ராமகிருஷ்ணாவையும், தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் குழும அதிகாரி ஆனந்த் சுப்ரமணியனையும் சிபிஐ கைது செய்துவிட்டது. இருவரும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கடந்த வாரம் டெல்லியை சேர்ந்த ஓபிஜி செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சஞ்சய் குப்தாவை சிபிஐ கைது செய்தது. முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்களை அழிப்பதற்கு சித்ரா ராமகிருஷ்ணா தரப்பு முயற்சி செய்ததாகவும், புகாரை விசாரித்த செபி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் அண்மையில் சிபிஐ நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

கூட்டுறவு வங்கிகளில் இனி இதெல்லாம் கிடைக்கும்.. மத்திய அரசு எடுத்த சூப்பர் முடிவு!
இந்நிலையில், பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் தொடர்புடையவர்களுக்கு செபி அபராதம் விதித்துள்ளது. இதன்படி தேசிய பங்குச் சந்தைக்கு 7 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாகி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோக Way2Wealth Brokers நிறுவனம், தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் குழும அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன், தேசிய பங்குச் சந்தையின் தொழில் வளர்ச்சித் தலைவர் ரவி வாரணாசி ஆகியோருக்கு தலா 5 கோடி ரூபாய் அபராதம் விதித்து செபி உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்