ஆப்நகரம்

SEBI: நிறுவனங்களுக்கு விதிமுறைகள் தளர்வு.. செபி வெளியிட்ட அறிக்கை!

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு விதிமுறைகளை தளர்த்தும் செபி.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 21 Feb 2023, 12:03 pm
பங்குச் சந்தையில் புதிதாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் வெளியிட வேண்டிய நிதி விவரங்கள், பதவி நியமனம் உள்ளிட்டவற்றுக்கான விதிமுறைகளை திருத்த பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி (Sebi) நேற்று ஒரு ஆலோசனை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil sebi
sebi


செபி இந்த அறிக்கையில், பங்குச் சந்தையில் புதிதாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் சந்திக்கும் சில சவால்களை தீர்க்க வழிவகை செய்துள்ளது. குறிப்பாக, பங்குச் சந்தையில் புதிதாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்களது நிதி விவரங்களை வெளியிடுவதில் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க செபி ஆலோசித்து வருகிறது.

இதுமட்டுமல்லாமல், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் இயக்குநர்கள், இணக்க அதிகாரி, தலைமை செயல் அதிகாரி (CEO). தலைமை நிதி அதிகாரி (CFO) போன்ற பதவிகளை நிரப்புவதற்கும் கால வரம்புகளை திருத்த செபி திட்டமிட்டு வருகிறது.

இதுமட்டுமல்லாமல், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் விதிமுறைகளுக்கு இணங்காமல் நீடிக்கும்போதும், அபராதத்தை செலுத்தாமல் இருக்கும்போதும், அந்நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர், முழு நேர இயக்குநர், தலைமை செயல் அதிகாரி ஆகியோரின் டீமாட் கணக்குகளை முடக்குவதை நிறுத்தவும் செபி திட்டமிட்டு வருகிறது.

இதுபோக, பங்குச் சந்தையில் புதிதாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்களது வருமான முடிவுகளை வெளியிடுவதற்கு கால வரம்பும் நிர்ணயிக்க செபி திட்டமிட்டுள்ளது. இதன்படி, நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் வருமான முடிவுகளை வெளியிட வேண்டும் என கால வரம்பு நிர்ணயிக்க செபி முன்மொழிந்துள்ளது.

பங்குச் சந்தையில் புதிதாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து அண்மையில் செபியிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதுமட்டுமல்லாமல் பல்வேறு ஒழுங்குமுறை சிக்கல்களை சரிசெய்ய வேண்டும் எனவும் செபிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து செபி ஒரு ஆலோசனை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்