ஆப்நகரம்

அதானிக்கு மேலும் நெருக்கடி.. செபி கையில் ஹிண்டென்பர்க் ரிப்போர்ட்!

அதானி குழுமம் குறித்த விசாரணைக்கு ஹிண்டென்பர்க் அறிக்கையை பயன்படுத்த செபி திட்டம்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 27 Jan 2023, 5:49 pm
அதானி குழுமம் பற்றியும், அதானி நிறுவனங்களின் பரிவர்த்தனைகள் பற்றியும் செபி ஆய்வு செய்து வருவதாகவும், தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஹிண்டென்பர்க் அறிக்கையை செபி தனது விசாரணைக்கு பயன்படுத்தப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil adani - sebi
adani - sebi


அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் (Hindenburg Research) நிறுவனம் ஜனவரி 25ஆம் தேதி அதானி குழுமம் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அதானி பங்குகள் கையாளப்பட்டு ஏற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதானி குழுமம் கணக்கு மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இத்தகவல் வெளியானதை தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்குகள் தாறுமாறாக சரிந்துள்ளன. ஜனவரி 25ஆம் தேதியே அதானி பங்குகள் கடுமையாக சரிந்தன. இதையடுத்து இன்று பங்கு வர்த்தகத்திலும் அதானி நிறுவனங்களின் பங்குகள் மிக மோசமாக சரிந்துள்ளன.

Gautam Adani net worth: ரூ.1.84 லட்சம் கோடி காலி.. உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி பின்னடைவு!
இன்று (ஜனவரி 27) அதானி குழுமத்தை சேர்ந்த பங்குகளான அதானி எண்டர்பிரைசஸ் பங்கு 18% மேல் சரிந்துள்ளது. அதானி ட்ரான்ஸ்மிஷன் பங்கு 20% மேல் சரிந்துள்ளது. அதானி டோட்டல் கேஸ் பங்கு 20% சரிந்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி பங்கு 20% மேல் சரிந்துள்ளது. அதானி போர்ட்ஸ் பங்கு 16% சரிந்துள்ளது. அதானி பவர் பங்கு 5% சரிந்துள்ளது. அதானி வில்மர் பங்கு 5% சரிந்துள்ளது. ஏசிசி பங்கு 13% சரிந்துள்ளது. அம்புஜா சிமெண்ட்ஸ் பங்கு 17% சரிந்துள்ளது. என்டிடிவி பங்கு 5% சரிந்துள்ளது.

இதனால், அதானி நிறுவனங்களின் சந்தை மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும், உலக பணக்காரர்கள் பட்டியலில் 3ஆம் இடத்தில் இருந்து 7ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் கவுதம் அதானி. அவரது சொத்து மதிப்பு 1.84 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சரிந்துள்ளதாக Forbes இணையதளம் கூறுகிறது.

ஹிண்டென்பர்க் நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. ஆனால், முடிந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்படி அதானிக்கு ஹிண்டென்பர்க் நிறுவனம் சவால் விடுத்துள்ளது.

Adani stocks: ரத்த வெள்ளத்தில் அதானி பங்குகள்.. ஹிண்டென்பர்க் ரிப்போர்ட் எதிரொலி!
இந்நிலையில், அதானி குழுமம் தொடர்பான விசாரணைக்கு ஹிண்டென்பர்க் அறிக்கையை பயன்படுத்த செபி முடிவு செய்துள்ளதாக ரகசிய தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, அதானி குழுமத்தில் உள்ள வெளிநாட்டு முதலீடுகள் குறித்து செபி ஆய்வு செய்து வருகிறது.

இத்துடன் அதானி குழுமத்தின் பரிவர்த்தனைகள் பற்றியும் செபி விசாரணை நடத்தி வருகிறது. இந்த சூழலில், ஹிண்டென்பர்க் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அதானி குழுமம் பற்றிய விசாரணைக்காக ஹிண்டென்பர்க் அறிக்கையை பயன்படுத்த செபி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே அதானி குழுமத்திடம் சில ஆவணங்களை செபி கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்