ஆப்நகரம்

Pension: உங்க மனைவிக்கு அதிக பென்சன் - மத்திய அரசின் சூப்பர் திட்டம்!

உடனே உங்களுடைய மனைவி பெயரில் இந்தக் கணக்கைத் தொடங்கினால் நல்லது.

Samayam Tamil 20 Jun 2022, 9:48 am
நீங்கள் இல்லாத போது எதிர்காலத்தில் உங்கள் மனைவி பணத்திற்காக வேறு யாரையும் சார்ந்திருக்காமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உடனே இந்தத் திட்டத்தில் சேரலாம். நீங்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் எதிர்காலத்தில் உங்கள் மனைவியின் வாழ்க்கைக்கு பெரிய உதவியாக இருக்க முடியும்.
Samayam Tamil pension


உங்கள் மனைவியின் பெயரில் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) கணக்கை நீங்கள் தொடங்கலாம். NPS கணக்கு உங்கள் மனைவிக்கு 60 வயதை எட்டியதும் மொத்த தொகையை வழங்கும். இதனுடன், ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு பென்சன் வடிவில் வழக்கமான வருமானம் கிடைக்கும். இது மட்டுமின்றி, NPS கணக்கில் உங்கள் மனைவிக்கு மாதந்தோறும் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதையும் நீங்கள் தீர்மானிக்கலாம்.

இந்தத் திட்டத்தின் மூலம் 60 வயதுக்கு பிறகு உங்கள் மனைவி யாரையும் பணத்துக்காக சார்ந்திருக்க மாட்டார்கள். தேசிய ஓய்வூதியத் திட்டக் கணக்கில் உங்கள் வசதிக்கேற்ப ஒவ்வொரு மாதமும் அல்லது ஆண்டுதோறும் பணத்தை டெபாசிட் செய்யலாம். வெறும் 1,000 ரூபாயில் உங்கள் மனைவி பெயரில் என்பிஎஸ் கணக்கைத் தொடங்கலாம். NPS கணக்கு 60 வயதில் முதிர்ச்சியடைகிறது. புதிய விதிகளின்படி, நீங்கள் விரும்பினால், மனைவியின் வயது 65 வரை NPS கணக்கை தொடரலாம்.

2 Rupee Coin: வீட்டில் இருந்துகொண்டே லட்சாதிபதி ஆகலாம்!
உதாரணமாக, உங்கள் மனைவிக்கு 30 வயதாகி, அவருடைய NPS கணக்கில் ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் முதலீடு செய்தால், ஆண்டுதோறும் முதலீட்டில் 10 சதவீதம் வருமானம் கிடைத்தால், 60 வயதில் அவர் கணக்கில் மொத்தம் ரூ.1.12 கோடி இருக்கும். இதில் அவர்களுக்கு சுமார் 45 லட்ச ரூபாய் கிடைக்கும். இது தவிர, அவர்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் 45,000 ரூபாய் ஓய்வூதியம் பெறத் தொடங்குவார்கள். இந்த ஓய்வூதியத்தை அவர்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பெறுவார்கள் என்பது மிக முக்கியமான விஷயம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்